இத்தாலிக்கு சுற்றுலா சென்ற அமெரிக்க இளைஞர் ஒருவர், மவுண்ட் எடனா எரிமலை மீது ஏறியபோது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவின் கென்னஸ் நகரைச் சேர்ந்த சிஸ்லி (29) என்ற இளைஞர், இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அவர் மவுண்ட் எடனா எரிமலை மீது ஏறியுள்ளார். அப்போது, திடீரென வானிலை மாறியதால், சிஸ்லி மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மீட்புக்குழுவினர், சிஸ்லியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இரவு 10 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எரிமலை மீது ஏறிய அமெரிக்க சுற்றுலாப் பயணி மின்னல் தாக்கி பலி

Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை