MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!

தமிழ்நாடு

சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!

Admin
Last updated: மே 15, 2026 12:37 மணி
Admin
Share
SHARE

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கை அடிபம்பு, பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சாலைக்குள் புதைந்துவிட்டது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சேத்தியாதோப்பு பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு சென்னிநத்தம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்வெட்டு அல்லது அவசர காலங்களில் மாற்று ஏற்பாடாக, அரசுக்கு சொந்தமான இடத்தில் கை அடிபம்பு அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தால் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த கை அடிபம்பின் பாதி பகுதியை சாலைக்கு அடியில் புதைத்து, அதன் மேல் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சாலை அமைக்கப்பட்டதால், அடிபம்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அவசர காலங்களில் குடிநீர் பெறுவதற்கு இந்த அடிபம்பு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால், பேரூராட்சி நிர்வாகம் சாலை அமைக்கும்போது இதை கவனிக்காமல், பாதி அடிபம்பை புதைத்துவிட்டது. இதனால், நாங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இந்த அடிபம்பை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsஅடிபம்புகடலூர்சாலைசேத்தியாதோப்புபொதுமக்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு ரத்து: ஜூன் 21-ல் மறுதேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
Next Article கருப்பு திரைப்படம் வெளியீடு: படக்குழு நெகிழ்ச்சி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழ்நாடு

தவெக அரசுக்கு காவல் அரணாக இருப்போம்: வைகோ உறுதி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசுக்கு தங்கள் கட்சி காவல் அரணாக விளங்கும் என உறுதியளித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு கவசமாக இருந்து, அதன் நலன்களைப்…

1 Min Read
தமிழ்நாடு

திண்டுக்கல்லில் 2 தலைகளுடன் அதிசய கன்றுக்குட்டி பிறப்பு!

திண்டுக்கல் மாவட்டம் மோளப்பாடியூரில் இரண்டு தலைகளுடன் அதிசய கன்றுக்குட்டி பிறந்துள்ளது. இதைக் காண அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

1 Min Read
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தமிழ்நாடு

தூத்துக்குடி: 14-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேராலயத்தின் விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு, வருகிற 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும்…

1 Min Read
தமிழ்நாடு

சிங்கப்பெண் படை வழக்கு: ஆளுங்கட்சி மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி தொடர்புடையதாக உள்ளதா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கை நியாயமாகவும் கடுமையாகவும் விசாரிக்க வலியுறுத்தல்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?