நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இணைந்து உருவாக்கியுள்ள 'கருப்பு' திரைப்படம், பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நேற்று உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டதோடு, திரைப்படம் வெளியாகாததால் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். நிதிப் பிரச்சனை காரணமாக நேற்று திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை என்று அவர் தெரிவித்தார்.
தற்போது, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, இன்று காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் 'கருப்பு' திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நீண்ட காத்திருப்புக்கு பிறகு, இன்று 'கருப்பு' திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு மகிழலாம்.