MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கோரிக்கை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கோரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீட் தேர்வு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கோரிக்கை!

தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கோரிக்கை!

Admin
Last updated: மே 15, 2026 9:09 காலை
Admin
Share
SHARE

2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும், 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக்கொள்ள அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன நடக்கும் என்ற தவிப்பில் உள்ளனர்.

இதுபோன்ற முறைகேடுகள் நடப்பது இது முதல்முறையல்ல. 2015-ஆம் ஆண்டு AIPMT தேர்வில் புளுடூத் மூலம் வினாத்தாள் கசிவு நடந்தது. உச்சநீதிமன்றம் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தியது. 2016-ஆம் ஆண்டு நீட் இரண்டாம் கட்டத்திலும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. 2017-ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டப் புகார்கள், மொழிபெயர்ப்புப் பிழைகள் எனப் பல பிரச்சனைகள் எழுந்தன. 2020, 2021-ஆம் ஆண்டுகளில் போலித் தேர்வர்கள் தேர்வெழுதியது, 2022-ஆம் ஆண்டிலும் ஆள்மாறாட்ட முறைகேடு, 2024-ஆம் ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள், கருணை மதிப்பெண்கள், ஒரே மையத்தில் பல டாப் மாணவர்கள், 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை பணம் பெற்று வினாத்தாள் கசிவு எனப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறைந்தது 155 மாணவர்கள் இந்த மோசடியால் பயனடைந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக மோசடி நடந்துள்ளது.

நீட் தேர்வு, தொடக்கம் முதலே ஏழை, கிராமப்புற, அரசுப் பள்ளி, தமிழ்வழி மாணவர்களுக்கு எதிராகவே இருந்து வருவதாக ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். தகுதி என்ற பெயரில், பணம் கொழிக்கும் வணிகமாகவும், பயிற்சி மையங்களால் உந்தப்பட்ட பணக்காரர்களுக்கான தேர்வாகவும் நீட் மாறிவிட்டது. பயிற்சி மையத் தொழிலில் 70 ஆயிரம் கோடி ரூபாய் புரள்கிறது. பல லட்சம் செலவழித்துப் பெறும் சிறப்புப் பயிற்சி இன்றி நீட் தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இது கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும் தடைக்கல்லாக இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்புகளை உறுதி செய்தது. நீட் இந்த முறையைச் சீர்குலைக்கிறது. நீட் தேர்வு முறை உருவாக்கும் மன அழுத்தத்தால் மாணவர்களின் உயிரும் பறிபோகிறது. முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்ததாகவும், மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் மாநில உரிமைகளை மீட்க வலியுறுத்தியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நீட் விலக்குக்காக இருமுறை சட்டம் இயற்றினோம், ஆனால் அவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன.

இந்த ஆண்டு நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளதால், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வை இரத்து செய்து, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரியுள்ளார். இதற்காக, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-இன் 14-ஆம் பிரிவினைத் திருத்தி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 123-இன்படி, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்ய இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET ExamTamil Naduநீட் தேர்வுமருத்துவ சேர்க்கைமு.க. ஸ்டாலின்ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
Next Article மழை அச்சத்தில் விவசாயிகள்: நெல் கொள்முதல் நிறுத்தம் கூடாது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகத்தில் 17 முதல் சுய கணக்கெடுப்பு தொடக்கம்

தமிழகத்தில் வருகின்ற 17-ஆம் தேதி முதல் சுய கணக்கெடுப்பு பணி தொடங்கும் என மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் முருகானந்தம் அறிவித்துள்ளார். இதில் வீட்டு பட்டியலிடும் கணக்கெடுப்பும் அடங்கும்.

0 Min Read
தமிழ்நாடு

மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திய நிலையில், சட்டமன்றத்தில் அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை…

1 Min Read
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்கிறார்
தமிழ்நாடு

வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் – புதிய சட்டம்!

வினாத்தாள் கசிவை தடுக்க புதிய சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம். மத்திய அரசு இன்று லோக்சபாவில் மசோதாவை தாக்கல் செய்கிறது. தேர்வு முறைகேடுகளில்…

2 Min Read
நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி
தமிழ்நாடு

படப்பிடிப்பில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு காயம்: மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலக்கிருஷ்ணா 'NBK 111' படப்பிடிப்பில் விபத்துக்குள்ளானார். முழங்காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி. படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?