MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நீட் தேர்வு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கோரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > நீட் தேர்வு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கோரிக்கை!
தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கோரிக்கை!

Admin
Last updated: May 15, 2026 9:09 am
Admin
Share
SHARE

2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும், 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக்கொள்ள அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன நடக்கும் என்ற தவிப்பில் உள்ளனர்.

இதுபோன்ற முறைகேடுகள் நடப்பது இது முதல்முறையல்ல. 2015-ஆம் ஆண்டு AIPMT தேர்வில் புளுடூத் மூலம் வினாத்தாள் கசிவு நடந்தது. உச்சநீதிமன்றம் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தியது. 2016-ஆம் ஆண்டு நீட் இரண்டாம் கட்டத்திலும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. 2017-ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டப் புகார்கள், மொழிபெயர்ப்புப் பிழைகள் எனப் பல பிரச்சனைகள் எழுந்தன. 2020, 2021-ஆம் ஆண்டுகளில் போலித் தேர்வர்கள் தேர்வெழுதியது, 2022-ஆம் ஆண்டிலும் ஆள்மாறாட்ட முறைகேடு, 2024-ஆம் ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள், கருணை மதிப்பெண்கள், ஒரே மையத்தில் பல டாப் மாணவர்கள், 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை பணம் பெற்று வினாத்தாள் கசிவு எனப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறைந்தது 155 மாணவர்கள் இந்த மோசடியால் பயனடைந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக மோசடி நடந்துள்ளது.

நீட் தேர்வு, தொடக்கம் முதலே ஏழை, கிராமப்புற, அரசுப் பள்ளி, தமிழ்வழி மாணவர்களுக்கு எதிராகவே இருந்து வருவதாக ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். தகுதி என்ற பெயரில், பணம் கொழிக்கும் வணிகமாகவும், பயிற்சி மையங்களால் உந்தப்பட்ட பணக்காரர்களுக்கான தேர்வாகவும் நீட் மாறிவிட்டது. பயிற்சி மையத் தொழிலில் 70 ஆயிரம் கோடி ரூபாய் புரள்கிறது. பல லட்சம் செலவழித்துப் பெறும் சிறப்புப் பயிற்சி இன்றி நீட் தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இது கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும் தடைக்கல்லாக இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்புகளை உறுதி செய்தது. நீட் இந்த முறையைச் சீர்குலைக்கிறது. நீட் தேர்வு முறை உருவாக்கும் மன அழுத்தத்தால் மாணவர்களின் உயிரும் பறிபோகிறது. முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்ததாகவும், மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் மாநில உரிமைகளை மீட்க வலியுறுத்தியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நீட் விலக்குக்காக இருமுறை சட்டம் இயற்றினோம், ஆனால் அவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன.

இந்த ஆண்டு நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளதால், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வை இரத்து செய்து, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரியுள்ளார். இதற்காக, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-இன் 14-ஆம் பிரிவினைத் திருத்தி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 123-இன்படி, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்ய இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:NEET ExamTamil Naduநீட் தேர்வுமருத்துவ சேர்க்கைமு.க. ஸ்டாலின்ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
Next Article மழை அச்சத்தில் விவசாயிகள்: நெல் கொள்முதல் நிறுத்தம் கூடாது!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மே 26 முதல் தென்மேற்குப் பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்திய வானிலை ஆய்வு மையம், தென்மேற்குப் பருவமழை மே 26-ல் கேரளாவில் தொடங்க…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே காரணம் – சிவக்குமார்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசின்…

May 15, 2026

ஐ.நா. சீர்திருத்தம்: காலம் கடந்துவிட்டது – ஜெய்சங்கர் எச்சரிக்கை

பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர்…

May 15, 2026

உன்னாவ் வழக்கு: பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிர்ச்சி!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக முன்னாள்…

May 15, 2026

மத்திய அமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு: பரபரக்கும் தெலங்கானா!

தெலங்கானாவில் மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சயின்…

May 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழக சட்டசபைக் கூட்டம் தொடக்கம்: ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகப் பொறுப்பேற்பு

தமிழக சட்டசபையின் 17-வது கூட்டம் தொடங்கிய நிலையில், ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – அரசாணை வெளியீடு

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிப்பு

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் முக்கிய நடவடிக்கையாக, கடந்த நிதியாண்டில் மட்டும் 26 ரயில் நிலையங்களில் புதிதாக 923 கண்காணிப்பு கேமராக்கள்…

1 Min Read
தமிழ்நாடு

ராஜ்பவன் பகுதியில் மதில் சுவர் மீது உலா வந்த சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் ராஜ்பவன் பகுதியில் மதில் சுவர் மீது சிறுத்தை ஒன்று உலா வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய பகுதியில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?