MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவை: கொசு மருந்து அடித்த பின் 2 பேர் உயிரிழப்பு – பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவை: கொசு மருந்து அடித்த பின் 2 பேர் உயிரிழப்பு – பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவை: கொசு மருந்து அடித்த பின் 2 பேர் உயிரிழப்பு – பரபரப்பு

தமிழ்நாடு

கோவை: கொசு மருந்து அடித்த பின் 2 பேர் உயிரிழப்பு – பரபரப்பு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 12, 2026 7:23 காலை
Fernandez
Share
கோவை அன்னூரில் கொசு மருந்து தெளிக்கும் பணியாளர்கள்
கோவை அன்னூரில் டெங்கு தடுப்பு பணியின் ஒரு பகுதியாக கொசு மருந்து தெளிக்கும் காட்சி.
SHARE

கோவை மாவட்டம் அன்னூரில் கொசு மருந்து தெளித்த பிறகு இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு பகுதியில் சமீபத்தில் மூன்று குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, டெங்கு பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக, அன்னூர் பேரூராட்சி நிர்வாகம் அன்னூர், சத்தி சாலை, உப்பு தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியை நேற்று தொடங்கியது. கழிவுநீர் கால்வாய்கள், குப்பைத் தொட்டிகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களில் பணியாளர்கள் கொசு மருந்தை தெளித்தனர். மேலும், குடியிருப்புகளுக்கு உள்ளேயும் சென்று மருந்து அடித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று உப்பு தோட்டம் பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்பட்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த மோகன் (65) மற்றும் ராணி என்கிற பிரேமா (75) ஆகியோர் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். உயிரிழந்த மோகன் ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ராணி என்கிற பிரேமாவும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

குறைவான தண்ணீரில் அதிக அளவு கொசு மருந்தை கலந்து தெளித்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். டெங்கு பாதிப்புள்ள பகுதிகளைச் சுற்றி 400 மீட்டர் தொலைவிற்கு கொசு மருந்து அடிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதன் பேரிலேயே இப்பணியில் ஈடுபட்டதாகவும், இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

செயல் அலுவலரின் இந்த விளக்கத்தால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், பேரூராட்சியின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் மேலும் கூறுகையில், 'உப்பு தோட்டம் பகுதியில் கடந்த 10 நாட்களில் 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாகவே மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. இந்த மருந்து டெங்கு பரவலைத் தடுப்பதற்கு மட்டுமே உதவும், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாது. உயிரிழந்த மோகன் அதிக குடிப்பழக்கம் காரணமாக விரைவில் இறந்துவிடுவார் என தனியார் மருத்துவமனை கூறியிருந்ததாகவும், ராணி நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இருப்பினும், பொதுமக்கள் கொசு மருந்து அடித்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்' என்று தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AnnurcoimbatoreDeathsDengue FeverMosquito Foggingஅன்னூர்உயிரிழப்புகொசு மருந்துகோவைடெங்கு காய்ச்சல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் காட்சி 12 ஆண்டுகளுக்குப் பின் ஆடி அமாவாசை: பித்ரு தோஷம் நீங்க அபூர்வ நாள்!
Next Article புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை டீ கோப்பை எலுமிச்சை டீ: மூளை நரம்புகளுக்கு வலு சேர்க்கும் அற்புத பானம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியிருக்கும் காட்சி

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியது ஏன்? உடலில் எரிச்சல் காரணம்!

மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் உடலில் எரிச்சல் இருப்பதாக கூறி, ஒரு மாதமாக…

ஆகஸ்ட் 12, 2026

பெங்களூரு சிறையில் திடீர் சோதனை: பிரஜ்வல் ரேவண்ணாவிடம் செல்போன் சிக்கியது

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவிடம் இருந்து…

ஆகஸ்ட் 12, 2026

ஜாம்பி இளைஞர்கள்: பஞ்சாப்-ராஜஸ்தான் சர்ச்சை – பாஜக, ஆம் ஆத்மி இடையே வார்த்தை மோதல்

பஞ்சாபில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் 'ஜாம்பிகள்' போல…

ஆகஸ்ட் 12, 2026

24 மணி நேரமும் ரேஷன் அரிசி: சத்தீஸ்கரில் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகம்

சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி…

ஆகஸ்ட் 12, 2026

மும்பையில் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு, மீட்புப் பணிகள் தீவிரம்

மும்பையில் நிலச்சரிவு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர்.…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

தமிழக முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வது குறித்த செய்தி
தமிழ்நாடு

கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்: காவிரி, மேகதாது குறித்து ஆலோசனை

தமிழக முதல்வர் விஜய், காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க வருகிற 3-ம் தேதி கர்நாடகம் செல்கிறார். பெங்களூரில் நடைபெறும் இந்த…

2 Min Read
தமிழ்நாடு

தூய சக்தியா? இந்து விரோத சக்தியா? – எச்.ராஜா கேள்வி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் கருத்து தெரிவித்த நிலையில், 'தூய சக்தியா? இந்து விரோத சக்தியா?' என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

1 Min Read
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே. ஏ. முகமது ஷெரீப் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு: விசாரணைக்கு எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களுக்கான உள் இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சமூகநீதி இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை…

1 Min Read
தமிழ்நாடு

வெளிநாட்டு குப்பைகளுக்கு இந்தியா டம்பிங் கிரவுண்ட் ஆகாது: ஐகோர்ட்

வெளிநாட்டு குப்பைகளை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக தெரிவித்துள்ளது. ஒரு சட்டவிரோத செயலை மற்றொரு சட்டவிரோத செயல்பாடு மூலம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?