MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கள்ளக்காதல்: நண்பனை காரில் ஏற்ற முயன்ற நபர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கள்ளக்காதல்: நண்பனை காரில் ஏற்ற முயன்ற நபர் கைது!
தமிழ்நாடு

கள்ளக்காதல்: நண்பனை காரில் ஏற்ற முயன்ற நபர் கைது!

Admin
Last updated: May 14, 2026 4:12 pm
Admin
Share
SHARE

வேலூரில் நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நபர், அவரை காரில் ஏற்ற முயன்று கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூரைச் சேர்ந்த ஜெயக்குமார் (34), அவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு 13 வருட திருமண வாழ்வில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அதேபோல், புதூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (26), 4 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து, தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். திருப்பதியில் பானிபூரி கடை நடத்தி வரும் அஜித்குமாரும், ஜெயக்குமாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று, ஜெயக்குமார் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த அஜித்குமார் திடீரென மொபட் மீது காரை ஏற்ற முயன்றுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தண்ணீர் தொட்டி மீது மோதி நின்றது. அப்போது, 'உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்' என அஜித்குமார் மிரட்டியதாக ஜெயக்குமார் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜெயக்குமார் மற்றும் அஜித்குமார் நெருங்கிய நண்பர்கள் என்றும், அடிக்கடி அஜித்குமார் ஜெயக்குமாரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, ஜெயக்குமாரின் மனைவி சிவரஞ்சனிக்கும் அஜித்குமாருக்கும் 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் ஜெயக்குமாருக்கு தெரியவந்ததை அடுத்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் சேர்ந்து வாழ அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருப்பினும், சிவரஞ்சனியும் அஜித்குமாரும் மீண்டும் பழகி கள்ளக்காதலை வளர்த்ததுடன், அஜித்குமார் சிவரஞ்சனியுடன் இருந்த தகாத உறவை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஜெயக்குமார், சிவரஞ்சனியிடம் விவாகரத்து கேட்டு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தால் ஜெயக்குமாரை காரில் ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:MDTV 24x7Tamil Nadu Newsகள்ளக்காதல்கொலை முயற்சிவேலூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்த வீரர் இந்திய டெஸ்ட் அணிக்கு அவசியம் – அஸ்வின் பரிந்துரை!
Next Article மேற்குவங்க 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 91.23% தேர்ச்சி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருமணம் நின்றுபோனது! மணமகன் மீது மணமகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் காதல் திருமண விழாவில் பெரும் குழப்பம்! மணமகனை பார்த்ததும்…

May 14, 2026

தேர்தல் ஆணையர் தேர்வு: அமைச்சர் முடிவெடுப்பாரா? உச்சநீதிமன்றம் கேள்வி

தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் மத்திய…

May 14, 2026

16 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மே 30 முதல் சிறப்பு பணிகள் தொடக்கம்!

நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 3…

May 14, 2026

மேற்கு வங்கத்தில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்: பாஜக அரசு அதிரடி!

மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு,…

May 14, 2026

உ.பி.யில் புயல், மழை: 89 பேர் பலி; நிவாரணப் பணிகளுக்கு முதல்வர் உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் திடீரென வீசிய சூறைக்காற்று மற்றும்…

May 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!

மாற்றுத்திறனாளிகள் குறித்து தான் பேசிய வார்த்தைகளுக்கு அமைச்சர் கீர்த்தனா மனமார்ந்த மன்னிப்பு கோரியுள்ளார். தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம் என்றும்…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டர் கைது கோரி மனைவி உண்ணாவிரதம்

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், கடந்த ஏப்ரல் 7, 2026 அன்று காவல் சார்பு ஆய்வாளர் இசக்கிராஜாவால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்தச்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: டாஸ்மாக் இயக்குனரும் அடக்கம்

தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

0 Min Read
தமிழ்நாடு

நாகர்கோவில்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் சாவு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் சிலுவைக்கண். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கீசர்பெர்ல்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?