MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு: 3 பேர் மீது வழக்கு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு: 3 பேர் மீது வழக்கு!
தமிழ்நாடு

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு: 3 பேர் மீது வழக்கு!

Admin
Last updated: May 14, 2026 12:11 pm
Admin
Share
SHARE

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற மூவர் வாக்களித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக் நகரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், கனடா நாட்டில் குடியுரிமை பெற்று அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தன் சகோதரர் திருமணத்திற்காக சென்னை வந்திருந்தபோது, தி.நகர் சட்டமன்றத் தொகுதியில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். மீண்டும் கனடா செல்ல சென்னை விமான நிலையம் வந்தபோது, அவரது கை விரலில் இருந்த மை அடையாளத்தைக் கண்ட குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்படாததால் வாக்களித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கே.கே.நகர் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவித்தனர்.

இதேபோல், விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆஸ்திரேலியா நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவர், விருகம்பாக்கம் தொகுதியில் வாக்களித்தது தெரியவந்தது. இவர் மீண்டும் தனது நாட்டுக்குத் திரும்ப விமான நிலையம் வந்தபோது, அவரது கை விரலில் இருந்த மை அடையாளத்தைக் கண்டு அதிகாரிகள் விசாரித்தனர். இதையடுத்து, விருகம்பாக்கம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இலங்கை நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவரும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்தது அம்பலமாகியுள்ளது. இவர் விமான நிலையம் வந்தபோது கண்டறியப்பட்டு, கொடுங்கையூர் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள், வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களின் பெயர்கள் எப்படி இடம்பெற்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் முடிவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தச் சூழலில், ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Election LawForeign Votersசட்டமன்ற தேர்தல்சென்னை செய்திகள்தமிழக தேர்தல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 5 ஆண்டு சட்டப்படிப்பு: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் விண்ணப்பம்!
Next Article டபுள் ஆக்​குபன்​சி: ‘உயிரே’ பாடல் வெளியீடு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மே 30 முதல் தொடக்கம்!

நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்…

May 14, 2026

கேரளாவின் புதிய முதல்வர் வீ.டி.சதீசன்: இழுபறிக்கு முற்றுப்புள்ளி!

கேரளாவின் புதிய முதலமைச்சராக வீ.டி.சதீசனை காங்கிரஸ் தேசிய…

May 14, 2026

மேற்குவங்க 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 91.23% தேர்ச்சி!

மேற்குவங்க 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.…

May 14, 2026

கேரள முதல்வராகிறார் வி.டி.சதீசன்: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!

கேரளாவில் அடுத்த முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்க உள்ளார்.…

May 14, 2026

கேரள முதல்​வர் யார்? வேணுகோ​பா​லுக்கு எதிர்ப்பு – போஸ்​டர்​கள் மூலம் எச்சரிக்கை!

கேரளாவில் காங்கிரஸ் முதல்வர் யார் என்பதில் இழுபறி…

May 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தேர்தல் முடிவுகள்: ஸ்டாலின் கண்ட ‘மாயாஜால சுனாமி’ – திமுகவுக்கு எச்சரிக்கை!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் முடிவுகளை 'கவர்ச்சி மாயாஜால சுனாமி' என வர்ணித்து, கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி: திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப் பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பன், ஒரு வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளரி டம் தோல்வி…

3 Min Read
தமிழ்நாடு

தமிழக புதிய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண்: யார் இவர்?

தமிழகத்தின் புதிய அரசு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்தப் பதவியை வகித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

எம்.எல்.ஏ. பதவியேற்கவில்லை..! சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சி.வி. சண்முகம்

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?