MDTV 24×7: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்கியுள்ளது. 2026-27 கல்வியாண்டில் சேர விரும்பும் மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சீர்மிகு சட்டப் பள்ளி, பல்கலைக்கழகத்துடன் இணைந்த அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும்) இந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் வருகிற ஜூன் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது.
முன்னதாக, 3 ஆண்டு சட்டப் படிப்புகள் மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான விண்ணப்ப தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள், பல்கலைக்கழக இணையதளத்தை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது குறித்த மேலதிக விவரங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் அனைத்தும் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். மாணவர்கள் கடைசி தேதிக்கு முன்பாக விண்ணப்பித்து, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.