MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிப்பு

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிப்பு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 6, 2026 1:01 மணி
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் பொன்முடி
முன்னாள் அமைச்சர் பொன்முடி
SHARE

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். இந்த கருத்துக்கள் பெரும் எதிர்ப்பை கிளப்பியதோடு, அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதியன்று பொன்முடி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினரான உமா ஆனந்தன் என்பவர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பொன்முடிக்கு எதிராக தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

மத ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டுதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பொன்முடியைத் தண்டிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, பின்னர் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக, தனக்கு எதிராகப் பதியப்பட்ட இந்த தனிநபர் புகாரை ரத்து செய்யக் கோரி, பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் ஜூலை 2 அன்று வழங்கினார். வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம், உமா ஆனந்தன் தாக்கல் செய்த தனிநபர் புகாரில் நீதிமன்றம் தலையிட மறுத்து, பொன்முடியின் கோரிக்கையை நிராகரித்தது.

மேலும், இந்த வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பொன்முடி நேரில் ஆஜராகாததால், நீதிபதி சவுந்திர பாண்டியன் அவர் மீது கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார். வரும் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் பொன்முடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai CourtHigh CourtPonmudiWarrantஉயர் நீதிமன்றம்சென்னை நீதிமன்றம்பிடிவாரண்ட்பொன்முடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யும் நபர் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய எளிய வழி
Next Article இருசக்கர வாகனத்தில் லேப்டாப்பை பயன்படுத்தும் இளைஞர் உயிரைப் பணயம் வைத்து லேப்டாப்பில் வேலை பார்த்த இளைஞர்: வைரல் வீடியோ!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தொடர்பான கைது நடவடிக்கை

மும்பையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபர் போக்சோவில் கைது

மும்பையில் சிறுமியை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ்…

ஆகஸ்ட் 6, 2026

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் 'வரி…

ஆகஸ்ட் 6, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.5.46 கோடி குவிந்தது: பக்தர்கள் பரவசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

ஆகஸ்ட் 6, 2026

ஜார்க்கண்ட் அரசு பணி தேர்வு முறைகேடு: மாணவர்கள் போராட்டம் 12வது நாள்

ஜார்க்கண்ட் அரசு பணி நியமனத் தேர்வில் முறைகேடு…

ஆகஸ்ட் 6, 2026

வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

மங்களூருவில் வாலிபால் விளையாடும்போது 10ஆம் வகுப்பு மாணவன்…

ஆகஸ்ட் 6, 2026

You Might Also Like

போக்குவரத்து துறை ஊழியர்கள் போராட்டம்
தமிழ்நாடு

போக்குவரத்து துறை: ரூ.20 கோடி ‘பார்ட்டி ஃபண்ட்’ கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை!

போக்குவரத்து துறையில் ரூ.20 கோடி 'பார்ட்டி ஃபண்ட்' கொடுத்தவர்களுக்கு பணி மாறுதல், நியமனங்களில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. 350 குடும்பங்கள் பாதிப்பு.

2 Min Read
விமான விபத்து விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு குறித்த தகவல்
தமிழ்நாடு

ஏர் இந்தியா விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் சமர்ப்பிப்பு!

2025ல் நடந்த ஏர் இந்தியா போயிங் 787 விமான விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கை அக்டோபரில் சமர்ப்பிக்கப்படும் என AAIB உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. காக்பிட்…

2 Min Read
திருத்தணி முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாடு

திருத்தணி கோவிலில் சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்: பரபரப்பு

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை தரிசனத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் கார், போலீசாரால் அடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், அவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்…

2 Min Read
தமிழ்நாடு

கோவை-சென்னை ரயில்கள் பகுதியாக ரத்து: ரயில்வே அறிவிப்பு

தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை-கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் சென்னைக்கும் காட்பாடிக்கும் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தல்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?