நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் நாளை (மே 14) திரையரங்குகளில் வெளியாகிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து, கடவுள் நம்பிக்கைகளை இணைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
படத்தின் விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சிக்குப் பிறகு, நேற்று திருவனந்தபுரத்தில் 'கருப்பு' படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, படத்தைப் பற்றியும் தனது அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.