மாணவர்களுக்கு எதிராக அரசாங்கம் தேவையற்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும், அப்படிச் செய்தால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று டெல்லி விமான நிலையம் அருகே ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 'மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடியவர்கள். ஜூலை 20-ந்தேதி அவர்கள் ரத்தம் சிந்திய பிறகும், அரசாங்கத்தின் பேராசை தீரவில்லை என்றால், அவர்கள் தொடர்ந்து மாணவர்களை இப்படி துன்புறுத்தினால், நாங்கள் மீண்டும் வீதிகளில் இறங்குவோம். அதை விரைவில் செய்வோம்' என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், 'மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, அவர்களை பயங்கரவாதிகள் போல நடத்துவதை அரசு நிறுத்த வேண்டும். இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், நாங்கள் நாடு முழுவதும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராடுவோம்' என்றும் அபிஜீத் தீப்கே தெரிவித்தார்.
மாணவர்களின் போராட்டங்கள் நியாயமானவை என்றும், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாணவர்களை ஒடுக்கும் எந்தவொரு முயற்சியையும் தங்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணித்தால், அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், அதன் பொறுப்பை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அபிஜீத் தீப்கே எச்சரித்துள்ளார்.
மாணவர்களின் நலனைப் பாதுகாப்பதில் தங்கள் கட்சி உறுதியாக இருப்பதாகவும், அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
