MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு முறைகேடு: மோடி அரசின் உயர்நிலைக் குழு ஏமாற்று வேலை – வன்னி அரசு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு முறைகேடு: மோடி அரசின் உயர்நிலைக் குழு ஏமாற்று வேலை – வன்னி அரசு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீட் தேர்வு முறைகேடு: மோடி அரசின் உயர்நிலைக் குழு ஏமாற்று வேலை – வன்னி அரசு

தமிழ்நாடு

நீட் தேர்வு முறைகேடு: மோடி அரசின் உயர்நிலைக் குழு ஏமாற்று வேலை – வன்னி அரசு

Fernandez
Last updated: ஜூலை 27, 2026 4:08 மணி
Fernandez
Share
அமைச்சர் வன்னி அரசு நீட் தேர்வு குறித்து பேசுகிறார்
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து அமைச்சர் வன்னி அரசு கண்டனம்
SHARE

இளைஞர்களின் போராட்டங்களுக்கு அடிபணிந்த ஒன்றிய மோடி அரசு, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண்பதாகக் கூறி ஒரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

"இளைஞர்களின் போராட்டங்களுக்கு முன் மண்டியிட்ட ஒன்றிய மோடி அரசு, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு என்பதாக ஒரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் 'வல்லுநர்கள்' கொண்ட ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத், இந்திய உளவுத்துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ஒன்றிய கல்வித் துறை முன்னாள் செயலர் அனிதா கர்வால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அம்ரித் லால் மீனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது ஒன்றிய அரசின் ஏமாற்று வேலை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். கடந்த 2024ஆம் ஆண்டு நீட் தேர்வில் நாடு தழுவிய அளவில் பெருமளவில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, முன்னாள் ஐஐடி கான்பூர் நிர்வாகக்குழு தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை மோடி அரசு அமைத்தது. நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையை (NTA) சீரமைக்கும் என்று கூறப்பட்ட இக்குழு, அதே ஆண்டு அக்டோபர் 22 அன்று 101 பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால், இன்றுவரை அந்தப் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றாத மோடி அரசு, இப்போது மீண்டும் ஒரு கண்துடைப்பு குழுவை அமைத்துள்ளது. 2024 நீட் முறைகேட்டில் இருந்து 2026 முறைகேடு வரை தேசிய தேர்வு முகமைக்கு முழுநேர தலைமை இயக்குநர் நியமனம் கூட ஒன்றிய அரசால் செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்நிலைக் குழு, தேர்வு முகமையை சீரமைத்த லட்சணம் இதுதான். இப்போது அமைக்கப்பட்டுள்ள குழு, தேசிய அளவிலான தேர்வு முறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராயும் என்று அறிவிக்கப்பட்டாலும், அது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நொறுங்கிப் போன மோடியின் போலி பிம்பத்தை காப்பாற்றுவதற்கான குழுவாகவே அமைந்துள்ளது. மாட்டு மூத்திரம் குடித்தால் நோய்கள் குணமாகும் என்று அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் முரணாக பாடம் எடுக்கும் ஐஐடி இயக்குநர் காமகோடி இக்குழுவில் இருப்பது வேடிக்கையானது. ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்று இல்லை என்று ஒன்றிய மோடி அரசே அறிவித்த ஒன்றுக்கும் உதவாத ஆதார் அட்டையை கொண்டு வந்தவர்தான் குழுவின் தலைவர் நந்தன் நிலேகனி. மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் மக்கள் நல திட்டங்களிலிருந்து ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மற்றும் சிறுபான்மையின மக்களை ஒதுக்கி வைக்கும் கருவியாக ஆதார் அட்டையை பாஜக ஆளும் மாநில அரசுகள் பயன்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். தமிழ்நாட்டில் காலங்காலமாக நடத்தப்படும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் 100% மாணவர்களின் நம்பிக்கையைப் பெற்று, எந்த சிக்கலும் தடங்கலும் இன்றி வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், ஒன்றிய மோடி அரசோ சரக்கு போக்குவரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்று கூறி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியை நியமித்துள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைமை அதிகாரிக்கு கல்வித்துறை சீரமைப்பில் என்ன வேலை? அரசியலமைப்பு சட்டம் சொல்லும் சனநாயக பண்பு 'எல்லோருக்கும் எல்லாம்' என்பதே. சமமான கல்வி வசதியும் வாய்ப்பும் இல்லாத சூழலில், தகுதியை நிர்ணயித்து மாணவர்களை வெளியே நிறுத்தும் பிரத்தியேக தேர்வு முறைகள் மக்கள் விரோத சனாதன பண்புகளைக் கொண்டவை. நீட் தேர்வு ரத்து என்பதே நமது தங்கை அனிதா தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் நீட் உயிர்க்கொல்லி தேர்வுக்கு நாம் இழந்து வரும் குழந்தைகளுக்கான நீதியாக அமையும். இந்தாண்டு முறைகேட்டினால் ரத்தான நீட் தேர்வால் மட்டும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்தப் பதிவை எழுதும்போதே, நீட் மறுதேர்வு எழுதிய மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அங்கீதா சுரேஷ் சங்காலே எனும் 19 வயது மாணவி உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற செய்தி நெஞ்சை பிளக்கிறது. நீட் போன்ற உயிர்க்கொல்லி தேர்வு ரத்தே நமது ஒரே இலக்கு! நமது மாணவர் – இளைஞர் படை அதனை நிச்சயம் நிறைவேற்றும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒன்றிய அரசு நியமித்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் தகுதிகள் குறித்தும் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார். சரக்கு போக்குவரத்து நிபுணரை கல்வித்துறை சீரமைப்பில் நியமிப்பதும், உளவுத்துறை அதிகாரியை கல்வித்துறையில் ஈடுபடுத்துவதும் எந்த வகையில் நியாயம் என்றும் அவர் வினவியுள்ளார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எந்தவித பிரச்சனையும் இன்றி வெற்றிகரமாக நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒன்றிய அரசின் தேர்வு முறைகள் மக்கள் விரோத சனாதன பண்புகளைக் கொண்டவை என விமர்சித்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தனது ஒரே இலக்கு என்றும், அதற்காக மாணவர்-இளைஞர் படை பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Modi GovernmentNEET ExamNTAVanni Arasuதேசிய தேர்வு முகமைநீட் தேர்வுமோடி அரசுவன்னி அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை சிறையில் சந்திக்கும் உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சிறையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்
Next Article அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் தொடர்பாக வெளியான ஆடியோ அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம்: தவெக நிர்வாகி மீது புகார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தாக்குதலுக்கு உள்ளான ஆட்டோ டிரைவர் மற்றும் யானை

போபால் யானை தாக்குதல்: வெல்லம் கொடுத்தவரை மிதித்து கொன்ற சோகம்

ராஜ்நகரில் மத நிகழ்ச்சியின் போது, வெல்லம் கொடுத்த ஆட்டோ டிரைவரை யானை மிதித்து…

ஜூலை 27, 2026

பெப்சி, ரெட் புல்லில் ‘எனர்ஜி டிரிங்க்’ இருக்கக்கூடாது: FSSAI அதிரடி

பெப்சி, ரெட் புல் உள்ளிட்ட குளிர்பானங்களில் 'எனர்ஜி…

ஜூலை 27, 2026

நான் தெருப் போராளி – காங்கிரஸுக்கு தர்மேந்திர பிரதான் பதிலடி

முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தான்…

ஜூலை 27, 2026

இ20 பெட்ரோல் விவகாரம்: நிதின் கட்கரி குடும்பத்தினர் மீது அவதூறு – வழக்கு

இ20 பெட்ரோல் விவகாரம் தொடர்பாக, தன் குடும்பத்தினர்…

ஜூலை 27, 2026

கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்: 5 வயது மகன் வாக்குமூலம்

உத்தரப்பிரதேச மாநிலம் மகோபாவில், 8 மாத கர்ப்பிணி…

ஜூலை 27, 2026

You Might Also Like

பாதாள சாக்கடை பணிகளில் விபத்து நடந்த பகுதி
தமிழ்நாடு

பாதாள சாக்கடை பணியில் அலட்சியம்: 3 வயது குழந்தை பரிதாப பலி

சென்னையை அடுத்த புழல் அருகே பாதாள சாக்கடை பணிகளில் அலட்சியத்தால், சிறுவன் ஷாருக் ஈஸ்வரன் மீது இரும்புத் தகடுகள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். பாதுகாப்பு குறைபாடே விபத்துக்கு…

1 Min Read
தமிழ்நாடு

5 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

1 Min Read
திருவண்ணாமலை அருகே விபத்துக்குள்ளான லாரியின் காட்சி
தமிழ்நாடு

திருவண்ணாமலை அருகே லாரி மரத்தில் மோதி டிரைவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார். கிளீனர் படுகாயமடைந்தார்.

1 Min Read
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர்கள் ராஜினாமா வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சட்டமன்ற செயலாளர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?