MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 717 மதுபானக் கடைகள் மூடல்: வரவேற்பு தெரிவித்த மு. வீரபாண்டியன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > 717 மதுபானக் கடைகள் மூடல்: வரவேற்பு தெரிவித்த மு. வீரபாண்டியன்
தமிழ்நாடு

717 மதுபானக் கடைகள் மூடல்: வரவேற்பு தெரிவித்த மு. வீரபாண்டியன்

Admin
Last updated: May 12, 2026 2:14 pm
Admin
Share
SHARE

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தடுப்பு சிறப்புப்படை, சிங்கப் பெண் சிறப்புப்படை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டருக்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர், இளைஞர், மாணவர் அமைப்புகளும் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்தன. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கவை.

அதேநேரம், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் பகுதிகளில் செயல்படும் எஃப் எல் 2 மதுபானக் கடைகள் உள்ளிட்ட மனமகிழ் மன்றங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து அரசின் நடவடிக்கை என்ன என்பது அரசாணையில் தெளிவுபடுத்தப்படவில்லை. அவைகளும் மூடப்பட்டால் மட்டுமே அரசின் நோக்கம் முழுமையடையும். இந்த மதுபானக் கடைகள் மூடப்படுவதோடு, அரசு படிப்படியாக முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தும் திசையில் செயல்பட வேண்டும். மதுபானக் கடைகள் மூடப்படும்போது கள்ளச்சாராயம், விஷச்சாராயம் விற்பனை தலைதூக்காமல் தடுக்க அரசு விழிப்புணர்வுடன் செயல்பட்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோல, குடிநோய் மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான இலவச சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்க வேண்டும்.

மேலும், மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் சுமார் 3500 டாஸ்மாக் பணியாளர்களின் வேலைவாய்ப்பையும், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இந்தக் கடைகள் மூடப்படுவதற்கு முன்பாக, அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் அவர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகை ரவீணா ரவி – மலையாள இயக்குனர் தேவன் ஜெயக்குமார் திருமணம்
Next Article ஜெயலலிதா நினைவிடத்தில் சி.வி.சண்முகம் தரப்பினர் மரியாதை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவர், காரில் தீப்பிடித்து…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு…

June 28, 2026

காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்…

June 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வேலூர் அருகே பஸ் பள்ளத்தில் பாய்ந்தது: 20 பயணிகள் காயம்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் படுகாயமடைந்தனர். காவல்துறையினர் விசாரணை…

1 Min Read
தமிழ்நாடு

தியாகத்தை போற்றும் பக்ரீத்: தினகரன் வாழ்த்து

தியாகத்தைப் போற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்திட…

1 Min Read
தமிழ்நாடு

ஊட்டி: வீட்டு மாடிகளில் உலா வந்த கரடி – மக்கள் பீதி

ஊட்டி நகரில், மழையில் நனைந்தவாறு வீட்டு மாடிகளில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

குமரியில் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் புகுந்த நீர், சேதம்

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக 100 வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்து, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சேதமடைந்தன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?