MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் ஆக்ரோஷமான தெருநாய்களைப் பராமரிப்பதற்கான தனிமைப்படுத்தல் மையம் அமைப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் ஆக்ரோஷமான தெருநாய்களைப் பராமரிப்பதற்கான தனிமைப்படுத்தல் மையம் அமைப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் ஆக்ரோஷமான தெருநாய்களைப் பராமரிப்பதற்கான தனிமைப்படுத்தல் மையம் அமைப்பு!

தமிழ்நாடு

சென்னையில் ஆக்ரோஷமான தெருநாய்களைப் பராமரிப்பதற்கான தனிமைப்படுத்தல் மையம் அமைப்பு!

Admin
Last updated: மே 11, 2026 4:47 மணி
Admin
Share
SHARE

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்தவும், நோய்களிலிருந்து பாதுகாக்கவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்த புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட நிலையில், செட்டிமேடு, திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் கண்ணப்பர்திடல் என கூடுதலாக 5 இடங்கள் என மொத்தம் 10 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர அம்பத்தூர் மண்டலம், வார்டு-86க்குட்பட்ட அத்திப்பட்டு, ஆலந்தூர் மண்டலம், வார்டு-158க்குட்பட்ட நந்தம்பாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194க்குட்பட்ட உயிரி எரிவாயு நிலையம் ஆகிய 4 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்களுக்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று விரைவில் அனைத்து மையங்களும் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, 28 நாய்கள் பிடிக்கும் வாகனங்கள், 159 நாய் பிடிக்கும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 150 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், புதிதாக 15 நாய் பிடிக்கும் வாகனங்கள் மண்டலங்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.

இதுநாள்வரை 88,240 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களுக்கும் இலவச ரேபிஸ் நோய் தடுப்பூசியும், அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 1,47,538 தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி மற்றும் அக புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர் நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பு (Rabies) மற்றும் கெனைன் டிஸ்டெம்பர் (Canine Distemper) எனும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் கடிக்கும் தன்மை கொண்ட ஆக்ரோஷமான தெருநாய்கள் ஆகியவற்றை பராமரிப்பதற்கான தனிமைப்படுத்தல் மையம் (Quarantine Center) பெருங்குடி மண்டலம், வார்டு-189க்குட்பட்ட ம.பொ.சி. நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் நோயுற்ற 100 தெருநாய்களை பராமரிப்பதற்கான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட தெருநாய்களை உடனடியாக மீட்கவும், அவசர மீட்புப் பணிக்கும் 6 சிறப்பு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய உடனடி நடவடிக்கைகள் மூலம் ரேபிஸ் மற்றும் கெனைன் டிஸ்டெம்பர் நோய் பரவல் தடுக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் நலன் பாதுகாக்கப்படும்.

பொதுமக்களிடமிருந்து தெருநாய்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மாநகராட்சி சார்பில் பிரத்யேக புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரேபிஸ் மற்றும் கெனைன் டிஸ்டெம்பர் (Canine Distemper) நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் கடிக்கும் தன்மை கொண்ட ஆக்ரோஷமான தெருநாய்கள் இருப்பின் பொதுமக்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மையத்தின் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், குணப்படுத்த முடியாத நோயுற்ற நாய்கள், கடிக்கும் தன்மையுள்ள ஆக்ரோஷமான நாய்கள் ஆகியவற்றை பராமரிப்பதற்காக மணலி மற்றும் பெருங்குடி மண்டலம்,

வார்டு-189 ஆகிய 2 இடங்களில் தலா 250 தெருநாய்களை பராமரிப்பதற்காக நாய்கள் காப்பகங்கள் (Dog Shelters) அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article F35 மாயம்: மீண்டும் அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்?
Next Article “சினி​மா​வில் பாலின பாகு​பாடு இப்போதும் இருக்​கிறது” – நடிகை கீர்த்தி சனோன் புகார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தின் முன்னாள் துணை சபாநாயகர்

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: அரசியலே தவறு என கடிதத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

ஆகஸ்ட் 16, 2026

ChatGPT உதவியுடன் இளைஞர் செருப்பை கண்டுபிடித்தார்

மத்திய பிரதேசத்தில், கோயிலுக்கு வெளியே குவிந்திருந்த ஆயிரக்கணக்கான…

ஆகஸ்ட் 16, 2026

செங்கோட்டைக்கு சென்ற மோடியை வழிமறித்த மயில்கள், விலங்குகள்!

பிரதமர் மோடி செங்கோட்டைக்குச் செல்லவிருந்த நிலையில், அவர்…

ஆகஸ்ட் 16, 2026

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு: நவம்பர் மாத தரிசன கோட்டா அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான ஆர்ஜித…

ஆகஸ்ட் 16, 2026

மேற்குவங்க முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: கடிதம் எழுதி வைப்பு

மேற்குவங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ்…

ஆகஸ்ட் 16, 2026

You Might Also Like

சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் அறிவித்துள்ளார். இது சொத்து உரிமையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

1 Min Read
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் குகை பகுதி
தமிழ்நாடு

இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி பக்தர் உயிரிழப்பு

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் உடல் பருமன் காரணமாக சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆந்திர பக்தர் மணிக்குமார் உயிரிழந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 Min Read
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள்: ஜூலை 10, 11, 12 தேதிகளில் இயக்கம்!

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, ஜூலை 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை மற்றும் பிற நகரங்களிலிருந்து பல்வேறு…

2 Min Read
தமிழ்நாடு

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: 4, 5 தேதிகளில் தேர்வு – ஏற்பாடுகள் தயார்

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்வு முறைகேடுகளைத்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?