தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் அமர்வு இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். சட்டமன்றம் தொடங்கியதும், சபாநாயகர் கருப்பையா முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றதற்கான பதிவேட்டில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுக கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
சட்டமன்ற நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்கவுள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாகும். இதேபோல், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் அவர் சந்திக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திக்கவுள்ளார்.