MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை: தொழில் அதிபர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை: தொழில் அதிபர் கைது
இந்தியா

ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை: தொழில் அதிபர் கைது

Admin
Last updated: May 11, 2026 2:50 pm
Admin
Share
SHARE

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஒசக்கோட்டை தாலுகா சூலிபெலே பகுதியை சேர்ந்தவர் தீபக் கிருஷ்ணா. தொழில் அதிபரான இவர் சூலிபெலே பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் பெரிய பங்களா ஒன்றில் வசித்து வந்தார். அவர் தனது வீட்டில் 2 விலையுயர்ந்த நாய்களை வளர்த்து வந்தார்.

இதனை கவனித்துக்கொள்ள கேரளம் மாநிலம் திருச்சூர் பகுதியில் வசிக்கும் ஆண்டனி என்பவரின் மனைவி ஸ்மிதா (வயது 47) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தார். மேலும் ஸ்மிதாவுடன் அவரது ஊரை சேர்ந்த அலினா என்ற பெண்ணும், சின்னு என்பவரும் வீட்டு வேலைக்கு வந்திருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி ஸ்மிதா நாய்களுக்கு உணவு வைத்துக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அவரை கவனித்த தீபக் கிருஷ்ணா, ஸ்மிதாவை வீட்டுக்குள் அழைத்துள்ளார். பின்னர் ஸ்மிதாவை, தீபக் கிருஷ்ணா தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அவரை பாலியல் பலாத்காரம் செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால் ஸ்மிதா அதற்கு சம்மதிக்காமல், அங்கிருந்து தப்ப முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த தீபக் கிருஷ்ணா வீட்டில் இருந்த உருட்டு கட்டையை கொண்டு ஸ்மிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலை தடுக்க வந்த அலினா மற்றும் சின்னுவையும் அவர் மிரட்டி உள்ளார். இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

பின்னர் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்மிதாவை மீட்ட அலினா மற்றும் சின்னு ஆகியோர் சிகிச் சைக்காக சூலிபெலேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஸ்மிதா, கேரளம் மாநிலத்தில் உள்ள ஜூபிலி மிஷன் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்மிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்மிதாவின் கணவர் ஆண்டனி திருச்சூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கை சூலிபெலே போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர். அதைத்தொடர்ந்து சூலிபெலே போலீசார் தீபக் கிருஷ்ணாவை கைது செய்தனர்.

மேலும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மதுபான விடுதி ஒன்றில் தகராறு செய்து, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு சிறைக்கு சென்றார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதையடுத்து போலீசார், தீபக் கிருஷ்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்
Next Article சபாநாயகர் தேர்தலில் ஜே.சி.டி. பிரபாகர் போட்டி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

5 நாடுகளுக்கு பிரதமர் மோடி: முக்கிய பயண திட்டம் வெளியானது!

பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல் 20 வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு முக்கிய வெளிநாட்டுப்…

1 Min Read
இந்தியா

சுவேந்து அதிகாரி உதவியாளர் கொலை..3 பேர் கைது!

முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் உதவியாளரான சந்திரநாத் ரத் கொலை தொடர்பாக, மேற்கு வங்க காவல்துறை திங்களன்று பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களைக்…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்கத்தில் ஆயுஷ்மான் பாரத்: பிரதமர் மோடி மகிழ்ச்சி

இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத், இனி மேற்கு வங்கத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் தரமான…

1 Min Read
இந்தியா

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள கெய்காட் கிராமத்தில் உள்ள பஞ்சரூகி கோவிலில் நடக்கவிருந்த திருமணம், மணமகளின் அதிரடி முடிவால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மணமகன் வீட்டார்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?