MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல: ஈரான் ஜனாதிபதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல: ஈரான் ஜனாதிபதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல: ஈரான் ஜனாதிபதி

உலகம்

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல: ஈரான் ஜனாதிபதி

Admin
Last updated: மே 11, 2026 6:50 காலை
Admin
Share
SHARE

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

இந்நிலையில், ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், 21 மணிநேரம் நீடித்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை இருபுறமும் அமெரிக்காவின் கப்பல்கள் சூழ்ந்து கொண்டன. எனினும், ஈரானும் அந்த பகுதியில் தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளை வெளிப்படுத்தி வருகிறது. இந்த பகுதியை எரிசக்தி, உணவு வினியோகத்திற்கான சரக்குகள் போன்றவற்றை கொண்டு செல்லும் கப்பல்கள் அதற்கு ஈடாக, சுங்க கட்டணம் மற்றும் வரிகளை ஈரானுக்கு செலுத்த வேண்டியிருக்கும் என ஈரான் தெரிவித்தது.

இதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜஸ்கியான் வெளியிட்டு உள்ள செய்தியில், நாங்கள் எதிரியின் முன் எப்போதும் தலை வணங்க மாட்டோம். சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், நாங்கள் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல.

ஈரானின் உரிமைகளை பாதுகாப்பதுடன், உறுதியான வலிமையுடன் தேச நலன்களை பாதுகாப்பதே எங்களுடைய இலக்காகும். ஈரான், தன்னுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காகவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது என வலியுறுத்தி கூறினார்.

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் சமீபத்திய முன்மொழிதல்களுக்கான விசயங்களுக்கு, பாகிஸ்தானிய நடுவர்களின் வழியே தன்னுடைய பதிலை ஈரான் அளித்திருக்கிறது என்றார்.

இதன்படி, இந்த பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்று அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article AIADMK | அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு?
Next Article மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர்களுக்கு சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த அறிவுறுத்தும் பிரதமர் நரேந்திர மோடி

சமூக வலைதளங்களில் கவனம்: மத்திய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

அருணாச்சலில் சீன ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் 60 கி.மீ.…

ஆகஸ்ட் 20, 2026

10 ஆண்டு காத்திருப்புக்கு பின் குருவாயூர் கோயிலில் திருமணம்: ஸ்காட்லாந்து எம்பி மார்ட்டின் டே-நிதின் சந்த் இணைந்தனர்

10 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, ஸ்காட்லாந்து எம்பி…

ஆகஸ்ட் 20, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.6.12 கோடி காணிக்கை குவிந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் பக்தர்கள்…

ஆகஸ்ட் 20, 2026

பி.எம். கேர்ஸ் நிதி ரூ.8,452 கோடியாக உயர்வு: வட்டி வருவாய் ரூ.475 கோடி

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ‘பி.எம். கேர்ஸ்’ நிதியின்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

உலகம்

மலேசியாவில் புதிய டிஜிட்டல் குடிவரவு: விரைவான, பாதுகாப்பான பயணம்!

மலேசியாவில் சுமார் 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த பழைய குடிவரவு அமைப்புக்கு பதிலாக, அதிநவீன MyNIISe டிஜிட்டல் முறை அறிமுகம். பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான அனுபவம்.

2 Min Read
உலகம்

அமெரிக்காவில் இந்திய வாலிபர் படுகொலை: பீட்சா டெலிவரி பணியின் போது கொடூரம்

அமெரிக்காவில் பீட்சா டெலிவரி செய்யச் சென்ற இந்திய வாலிபர் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
உலகம்

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம்: 45 நாட்கள் நீட்டிப்பு!

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர் நிறுத்தம், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தபோதிலும், மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்தியஸ்தத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

1 Min Read
உலகம்

காங்கோ-உகாண்டாவில் எபோலா: 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 894 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி இல்லாதது பரவலை அதிகரிக்கிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?