MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: AIADMK | அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: AIADMK | அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - AIADMK | அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு?

தமிழ்நாடு

AIADMK | அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு?

Admin
Last updated: மே 11, 2026 6:50 காலை
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு அ.தி.மு.க. கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட தொடங்கி உள்ளது மீண்டும் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் இன்றி, சட்டப்பேரவை அ.தி.மு.க. குழு தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த அ.தி.மு.க. மொத்தத்தில் 169 தொகுதிகளில் போட்டியிட்டது. எனினும், அ.தி.மு.க. கட்சி வெறும் 47 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் அ.தி.மு.க. கூட்டணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைகூட பெற முடியாமல் போனது, எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக பொறுப்பேற்றதில் இருந்து தேர்தலில் அக்கட்சி சந்தித்து வரும் தொடர் தோல்விகள் மற்றும் த.வெ.க. ஆட்சி அமைப்பது குறித்த கட்சியின் நிலைப்பாடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் ஆட்சியிலும் பங்கேற்கலாம், சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டு சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பினர் ஆலோசனை கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பினரை சமாதானப்படுத்த மூத்த நிர்வாகிகள் குழு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் வீட்டுக்குச் சென்று பேசினர். இருப்பினும், சி.வி. சண்முகம் தரப்பு மூத்த நிர்வாகிகளின் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன், எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவை குழுத் தலைவராகவும், சி.வி.சண்முகம் துணைத் தலைவராக ஆதரவு தெரிவித்து அவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ.-க்கள் பதவியேற்பு இன்று காலை நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க.வில் மொத்தமாக உள்ள 47 எம்.எல்.ஏ.-க்களில் 35-க்கும் மேற்பட்டோர் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். அத்துடன் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ.-க்கள் என சுமார் 60 சதவீதம் பேர் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி அணி பக்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு தற்போது சிக்கலான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாக வாய்ப்பு
Next Article பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல: ஈரான் ஜனாதிபதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர்களுக்கு சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த அறிவுறுத்தும் பிரதமர் நரேந்திர மோடி

சமூக வலைதளங்களில் கவனம்: மத்திய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

அருணாச்சலில் சீன ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் 60 கி.மீ.…

ஆகஸ்ட் 20, 2026

10 ஆண்டு காத்திருப்புக்கு பின் குருவாயூர் கோயிலில் திருமணம்: ஸ்காட்லாந்து எம்பி மார்ட்டின் டே-நிதின் சந்த் இணைந்தனர்

10 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, ஸ்காட்லாந்து எம்பி…

ஆகஸ்ட் 20, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.6.12 கோடி காணிக்கை குவிந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் பக்தர்கள்…

ஆகஸ்ட் 20, 2026

பி.எம். கேர்ஸ் நிதி ரூ.8,452 கோடியாக உயர்வு: வட்டி வருவாய் ரூ.475 கோடி

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ‘பி.எம். கேர்ஸ்’ நிதியின்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

விஜயை ஒருமையில் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்: பரபரப்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜயை ஒருமையில் விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் அவர் கூறினார்.

1 Min Read
தமிழ்நாடு

முதல் அமைச்சராக பொறுப்பேற்பு..விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் யார் யார்?

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி என பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த முக்கிய பிரமுகர்கள்…

2 Min Read
உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி. வேலுமணி தொடர்பான வழக்கு விசாரணை
தமிழ்நாடு

எஸ்.பி. வேலுமணிக்கு சிக்கல்: 54 நியமனங்கள் சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் அதிரடி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. கோவை மாவட்டத்தில் 54 இளநிலை உதவியாளர் நியமனங்கள் சட்டவிரோதம் என அறிவித்து, அனைவரையும் பணியிலிருந்து நீக்க…

1 Min Read
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் காவலர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார்
தமிழ்நாடு

600க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கம் வழங்கினார்!

சென்னை: 600க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சிறப்புப் பதக்கங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். சட்டம்-ஒழுங்கு, குற்றத்தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?