அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய கொடையாகவும், தாய்மை எனும் பெருங்குணத்தை ஏந்திய தியாகத்தின் மறு உருவமாகவும் திகழும் தாய்மார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடிப்படை அடித்தளமாக, அளவிட முடியாத அன்பு கொண்டவராக, மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்தின் முதல் ஆசிரியராகத் திகழும் தாய்மார்களின் அன்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நாளும் போற்றி கொண்டாடுவோம்.