வியட்நாமின் பு கியூக் தீவு அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் சிக்கிய 32 இந்தியர்களின் பெயர் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த துயரச் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து தகவல் அல்லது மேலதிக விவரங்கள் தேவைப்படுபவர்கள், ஹோசிமின் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தால் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். இதற்காக +84362817930, +84915523714, மற்றும் +84334520414 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய இந்தியர்களின் முழு பட்டியல் பின்வருமாறு:
1. பாலசுப்ரமணி பழனிசாமி
2. செல்வம் பிச்சை
3. செந்தில்குமார் ஜெயவேல்
4. சிவகுமார் முத்துகுமாரசாமி
5. நிர்மல்குமார் சேதுராமன்
6. முருகபிரபு ஆறுமுகம்
7. ரூபன் செல்வநாதன் ஜேக்கப் யேசுபாதம்
8. ஸ்ரீதர் தர்மராஜன்
9. விக்னேஷ்வர் ராதாகிருஷ்ணன் கோபால்
10. ராமசுப்பு அண்ணாவி
11. அபுதல்கா ஜாஹினுதீன்
12. ஸ்ரீதர் சுந்தர்ராஜன்
13. வம்ஷீதர் செல்லூர் ராம்ராஜ்
14. செஞ்சதெய்வல் குப்புசாமி
15. நாகலாமடுகு சோஹன்
16. நல்லபெட்டா ஆதிசேஷய்யா ரவிதேஜா
17. ஷேக் அப்துல்லா அப்துல் மஜீத்
18. ராஜீவ் கலைவாணன்
19. பாலாஜி நடேசன்
20. வினயகுமார் சித்திபரமு பாஸ்கரா
21. ரவிசங்கர் சுகுமாறன்
22. விபல் உத்தம்சந்த்
23. சந்தோஷ்குமார் சாந்திலால் ஜெயின்
24. பாபு குப்புசாமி
25. அழகராஜன் சிவசாமி
26. வசந்தகுமார் ஆனந்தன்
27. ஸ்ரீதர் முடியம்
28. ஜெயலட்சுமி கெல்லி
29. கிஷோர் கெல்லி
30. அவிகாட் செரியன் தாமஸ் தாமஸ்
31. லோவெனி தாமஸ்
32. ரமேஷ்குமார் பச்சையப்பன்
இந்த விபத்து இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில், இந்திய துணை தூதரகம் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் விவரங்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
