தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 இடங்கள் கிடைத்தது. தேர்தல் முடிவு 4-ந்தேதி வெளியான நிலையில், அடுத்த நாள் காங்கிரஸ் த.வெ.க.-வுக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்து திமுக கூட்டணியில் இருந்து விலகியது. அப்போது, காங்கிரஸ் கட்சியை திமுக கடுமையாக விமர்சித்திருந்தது.
இந்த நிலையில் இன்று விஜய் முதல்வராக பதவி ஏற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-
தற்போது தமிழ்நாட்டின் சூழ்நிலையை பார்த்தீர்கள் என்றால், காங்கிரஸ் கட்சி 25 முதல் 30 வருடங்களாக திமுக-வுடன் நட்பு வைத்திருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு எப்போதெல்லாம் பிரச்சினை ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது.
உண்மையில், 2014-க்கு முன்பு 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி பெருமளவில் திமுக-வின் காரணமாகவே தப்பிப் பிழைத்தது. ஆயினும், காங்கிரசின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து உழைத்த அதே திமுக, அரசியல் சூழல் மாறிய தருணத்தில் காட்டிக் கொடுக்கப்பட்டது.
அதிகார வெறி கொண்ட காங்கிரஸ், கிடைத்த முதல் வாய்ப்பிலேயே திமுக-வுக்குப் பின்னால் குத்திவிட்டது. இப்போது, அரசியல் ரீதியாகத் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள, காங்கிரஸ் கட்சிக்கு முதுகில் ஏறிச் செல்லக்கூடிய இன்னொரு கட்சி தேவைப்படுகிறது.