MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கணவனை கொன்று புதைத்த மனைவி: 8 மாதங்களுக்குப் பின் கள்ளக்காதலனுடன் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கணவனை கொன்று புதைத்த மனைவி: 8 மாதங்களுக்குப் பின் கள்ளக்காதலனுடன் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கணவனை கொன்று புதைத்த மனைவி: 8 மாதங்களுக்குப் பின் கள்ளக்காதலனுடன் கைது

தமிழ்நாடு

கணவனை கொன்று புதைத்த மனைவி: 8 மாதங்களுக்குப் பின் கள்ளக்காதலனுடன் கைது

Fernandez
Last updated: ஜூலை 11, 2026 12:04 மணி
Fernandez
Share
கணவனை கொலை செய்து புதைத்த பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்
கணவனை கொலை செய்து புதைத்த பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது
SHARE

தெலுங்கானா மாநிலம் மியாப்பூரில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து புதைத்த பெண், 8 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்டேஷ் (45) என்பவர் மியாப்பூர் பகுதியில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருந்தனர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெண்டேஷ் தனது முதல் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், 2014-ல் கணவரை விவாகரத்து செய்த சத்தியவதி (40) என்ற பெண்ணுடன் பெண்டேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக மியாப்பூர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், நிஜாமாபாத்தை சேர்ந்த மதுசூதன் ரெட்டி (38) என்பவர் பெண்டேஷ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வந்துள்ளார். அப்போது, சத்தியவதிக்கு மதுசூதன் ரெட்டியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களது கள்ளக்காதலுக்கு பெண்டேஷ் தடையாக இருந்ததால், அவரைத் தீர்த்துக் கட்ட இருவரும் திட்டமிட்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி இரவு, சத்தியவதி தனது கணவர் பெண்டேஷுக்கு தூக்க மாத்திரை கலந்த உணவை கொடுத்துள்ளார். அதனை உண்ட பெண்டேஷ் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். பின்னர், தனது கள்ளக்காதலனான மதுசூதன் ரெட்டியை அழைத்த சத்தியவதி, இருவரும் சேர்ந்து பெண்டேஷின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.

கொலை செய்த பின்னர், பெண்டேஷின் சடலத்தை காரில் எடுத்துக்கொண்டு மராட்டிய மாநிலம் துல்ஜாபூருக்குச் சென்றனர். அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர். உடல் பாதி எரிந்த நிலையில் இருந்ததால், அதனை அங்கேயே புதைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

பின்னர், வீட்டிற்கு திரும்பிய சத்தியவதி, தனது கணவர் பெண்டேஷைக் காணவில்லை என்று மியாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கணவர் காணாமல் போனதாக நாடகமாடிய சத்தியவதியின் முகத்தில் எந்த சோகமும் இல்லை என்றும், அவர் மதுசூதன் ரெட்டியுடன் பல இடங்களுக்குச் சென்று வருவதையும் பெண்டேஷின் உறவினர்கள் கவனித்துள்ளனர்.

இதையடுத்து, பெண்டேஷின் உறவினர்கள் மியாப்பூர் காவல் நிலையத்தில் சத்தியவதி மீது நேரடியாகப் புகார் அளித்தனர். சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கணவரைக் கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண்டேஷ் கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு அவரது மனைவியும் கள்ளக்காதலனும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Illicit RelationshipMadhusudhan ReddyMurderPendesh MurderSathyavathiTelanganaகள்ளக்காதல்கொலைசத்தியவதிதெலுங்கானாபெண்டேஷ் கொலைமதுசூதன் ரெட்டி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வெள்ளி கொலுசை சுத்தம் செய்யும் பெண் வெள்ளி கொலுசை புதுசு போல் மாற்ற எளிய வீட்டு குறிப்பு!
Next Article தமிழக அரசு அரசாணை வெளியீடு - எம்-சாண்ட் ஏற்றுமதிக்கு தடை வெளிமாநிலங்களுக்கு எம்-சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சத்தீஸ்கர் ராய்கட் மாவட்டத்தில் காட்டு யானை தாக்குதல் சம்பவங்கள் குறித்த செய்தி

சத்தீஸ்கரில் யானை தாக்கி ஒரே நாளில் 2 பேர் பலி: ராய்கட் மாவட்டத்தில் அச்சம்

சத்தீஸ்கர் ராய்கட் மாவட்டத்தில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி பெண் மற்றும்…

ஜூலை 11, 2026

ஒடிசாவில் காரில் ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடித்த கொடூரம்

ஒடிசாவில் காரில் ஏ.டி.எம். இயந்திரத்தை கட்டி இழுத்துச்…

ஜூலை 11, 2026

இந்திய வம்சாவளியினர் – இருநாட்டு உறவின் தூண்: மோடி புகழாரம்

நியூசிலாந்தில் நடைபெற்ற 'கியா ஓரா மோடி' நிகழ்ச்சியில்…

ஜூலை 11, 2026

வியட்நாமில் படகு விபத்து: 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

தெற்கு வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

ஜூலை 11, 2026

கேரளாவில் போதைப்பொருள் வேட்டை: 6700க்கும் மேல் கைது!

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 6,700க்கும் மேற்பட்டோர்…

ஜூலை 11, 2026

You Might Also Like

சீனாவில் கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி
தமிழ்நாடு

சீனாவில் வரலாறு காணாத மழை: 900 பாம்புகள் தப்பி மக்கள் பீதி

சீனாவில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சேதமடைந்த பூங்காவில் இருந்து 900 பாம்புகள் தப்பிச் சென்றதால் மக்கள் அச்சத்தில்…

1 Min Read
வங்கி மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதைக் குறிக்கும் செய்திப் படம்
தமிழ்நாடு

தனியார் வங்கியில் ரூ.80 லட்சம் மோசடி: வங்கி மேலாளர் உட்பட 7 பேர் கைது

தனியார் வங்கி ஒன்றில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.80 லட்சம் மோசடி செய்த வழக்கில் வங்கி மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர்…

2 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

கரூர் சம்பவத்திற்கு விஜய்யும் ஒரு காரணம்: நயினார் நாகேந்திரன்

கரூர் சம்பவத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் ஒரு காரணம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டம் ஒழுங்கு…

1 Min Read
தமிழ்நாடு

தவெக-வில் இணைந்தனர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

அதிமுகவில் இருந்து விலகிய சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தமிழக வளர்ச்சி கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர். இந்த இணைப்பு விழாவில் 15,000 நிர்வாகிகள் பங்கேற்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?