MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை பாரபட்சமானது: உச்ச நீதிமன்றத்தில் பிளஸ் 2 மாணவர்கள் முறையீடு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை பாரபட்சமானது: உச்ச நீதிமன்றத்தில் பிளஸ் 2 மாணவர்கள் முறையீடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - கல்வி & வேலைவாய்ப்பு - சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை பாரபட்சமானது: உச்ச நீதிமன்றத்தில் பிளஸ் 2 மாணவர்கள் முறையீடு

கல்வி & வேலைவாய்ப்பு

சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை பாரபட்சமானது: உச்ச நீதிமன்றத்தில் பிளஸ் 2 மாணவர்கள் முறையீடு

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 9, 2026 2:37 மணி
Sri Prem Kumar R
Share
உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறைக்கு எதிராக மாணவர்கள் தாக்கல் செய்த மனு
சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் முறையீடு
SHARE

வளைகுடா நாடுகளில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வகுத்துள்ள மதிப்பீட்டு முறை பாரபட்சமானது என்றும், இதில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்க ஒப்புக்கொண்டது.

நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வு, 30 பள்ளி மாணவர் கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட தனித்தேர்வர்கள் தொடர்பாக கடந்த ஜூன் 21 அன்று வெளியிடப்பட்ட மதிப்பீட்டு கொள்கையை எதிர்த்து 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தாக்கல் செய்த தனி மனுவுக்கும் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் கிஷோர் சௌதரி, சிபிஎஸ்இ வகுத்துள்ள மதிப்பீட்டு முறையில் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மனுக்களின் நகல்களை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அலுவலகத்துக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் வினீத் ஜிந்தாலும் ஆஜரானார்.

மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளாக, மார்ச் 27 அன்று அறிவிக்கப்பட்ட மதிப்பீட்டு முறை பாரபட்சமாகவும், நியாயமற்றதாகவும் இருப்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை வெளிப்படையாகவும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதாகவும் இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வை நடத்த வேண்டும் என்றும், சிறப்புத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அல்லது முந்தைய மதிப்பீட்டு முறையின் மதிப்பெண் – இதில் எது மாணவர்களுக்குச் சாதகமாக உள்ளதோ, அதைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, கடந்த ஜூன் 22ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், வளைகுடா பகுதியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்காக சிபிஎஸ்இ புதிய மதிப்பீட்டு கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

வளைகுடா நாடுகளில் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என இரண்டு குழுக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி அளவிலான உள்மதிப்பீட்டுத் தேர்வு பதிவுகள் இருப்பதால், அவற்றை வைத்து மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால், தனித்தேர்வர்களுக்கு உள்மதிப்பீட்டுப் பதிவுகள் இல்லாததால், அவர்களுக்கென ஜூன் 21 அன்று புதிய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, தனித்தேர்வர்களுக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற கோட்பாட்டுத் தேர்வு மதிப்பெண்களில் 40 சதவீதமும், தேர்வர் கடைசியாக எழுதிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற கோட்பாட்டுத் தேர்வு மதிப்பெண்களில் 60 சதவீதமும் என்ற விகிதத்தில் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். இந்த முறையையும் எதிர்த்துத் தனித்தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CBSEEvaluation MethodGulf StudentsPlus 2Supreme Courtஉச்ச நீதிமன்றம்சிபிஎஸ்இபிளஸ் 2மதிப்பீட்டு முறைவளைகுடா மாணவர்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாடாளுமன்ற நிலைக்குழு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பரிந்துரைக்கிறது ஆயுஷ்மான் பாரத் காப்பீடு: ரூ.10 லட்சமாக உயர்வு?
Next Article திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கர்நாடக அமைச்சர் பேச்சுக்கு ஸ்டாலின் பதில் என்ன? – உதயநிதி கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக தேர்தல் ஆணைய அலுவலகம்

கர்நாடகா வாக்காளர் பட்டியல்: 1 கோடி பெயர்கள் நீக்கம் – வரைவு பட்டியல் வெளியீடு

கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளின் மூலம் சுமார் 1 கோடி…

ஆகஸ்ட் 25, 2026

நிர்மலா சீதாராமன் கனடா, அமெரிக்கா பயணம்: 8 நாள் முக்கிய சுற்றுப்பயணம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கனடா மற்றும்…

ஆகஸ்ட் 25, 2026

மஹூவா மொய்த்ரா கைது வாரன்ட்டுக்கு தடை: நாடியா நீதிமன்றம்

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவுக்கு எதிராக…

ஆகஸ்ட் 25, 2026

வெங்காய விலை உயர்வு: 5 நகரங்களுக்கு ரயில் மூலம் வினியோகம்

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, சென்னை, மதுரை…

ஆகஸ்ட் 25, 2026

சீனா சென்றார் அஜித் தோவல்: எல்லைப் பாதுகாப்பு குறித்து ஆலோசனை

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,…

ஆகஸ்ட் 25, 2026

You Might Also Like

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு
கல்வி & வேலைவாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 காலிப்பணியிடங்கள்: டிகிரிதாரர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை பற்றிய விவரங்கள்.

1 Min Read
தமிழ்நாடு

அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை: டிரம்ப் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் ‘செக்’!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்போரின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை குடியுரிமை மறுக்கும் டிரம்ப் நிர்வாக உத்தரவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது வெளிநாட்டினருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

1 Min Read
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார்
கல்வி & வேலைவாய்ப்பு

மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 641 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு

2026-27ஆம் கல்வியாண்டிற்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 641 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2 Min Read
9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவியர் பள்ளி இடைநிற்றல் குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்
கல்வி & வேலைவாய்ப்பு

9-10 ஆம் வகுப்பு மாணவியர் இடைநிற்றல்: மத்திய அரசு தகவல்

9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவியர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் விகிதம் அதிகம். குடும்ப வருமானம், வீட்டு வேலைகள் முக்கியக் காரணங்கள். மத்திய அரசு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?