MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய்க்கு சீமான் கேள்வி: வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய்க்கு சீமான் கேள்வி: வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய்க்கு சீமான் கேள்வி: வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா?

தமிழ்நாடு

விஜய்க்கு சீமான் கேள்வி: வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா?

Admin
Last updated: ஜூலை 8, 2026 7:00 மணி
Admin
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

வாக்குகள் வேட்டையாடுவதற்காக அரசியல் தரம் தாழ்ந்து மலினமான அரசியல் செய்யப்படுகிறதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் இடைத்தேர்தலை மனதில் வைத்து, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், 50 நாட்கள் வரை கரூரில் உயிரிழந்த குடும்பங்களைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் விஜய், அதிமுக உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்த பிறகு உடனடியாக கரூருக்குச் செல்ல முற்படுவதும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கத் திட்டமிடுவதும் மலினமான வாக்கரசியலாகும். கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தலா 35 லட்சம் ரூபாய் வரை துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அரசு வேலை என அறிவிப்பது இடைத்தேர்தலுக்காகச் செய்யப்படும் அற்பத்தனமாகும். இது ஒருபோதும் ஏற்க முடியாதது.

கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரைக் கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தது ஏற்கவே முடியாத பேரவலம். இது சமகாலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய துயரமாகும். இந்த துயரத்தில் உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கு துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டியது தார்மீகக் கடமை. அது முழுமையாக வழங்கப்பட்ட பிறகு, கரூர் இடைத்தேர்தலுக்காக அரசு வேலை என அறிவிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகும். அரசு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு, வேலைக்காகப் பல இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினைத் தராமல், இடைத்தேர்தல் அரசியல் இலாபத்துக்காக அரசு வேலையைத் தாரைவார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் நின்று உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கோ, சுகாதாரத்தைப் பேணிகாக்க தூய்மைப்பணியாளர்களாகப் பணிசெய்து, நச்சு வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கோ, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று, சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ கிடைக்காத அரசுப்பணி, திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்குமென்றால், இது எந்தவிதத்தில் சரியானது? கரூரில் உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு தவெகவும், முதல்வர் விஜய்யும்தான் முழுமுதற் காரணம் என்பதை நாடறியும். ஆனால், இந்த நொடிவரை அந்த மரணங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்காமல், தன் மீது பழிபோடுவதாகச் சொல்லி, அரசியல் செய்து வருவது மிகக் கீழ்த்தரமானது. அதனைத் தாண்டி, கரூர் இடைத்தேர்தலுக்காக அப்பேரவலத்தைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட முனைவது குரூரத்தின் உச்சம்.

கரூரில் உயிரிழப்புகள் நிகழ்ந்தபோது களத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காமல், விரைந்து வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று பார்க்காமல், ஒரு மாதம் கழித்து மாமல்லபுரத்திலுள்ள விடுதிக்கு அழைத்துப் பார்த்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீது இப்போது கொள்ளும் பரிவெல்லாம் இடைத்தேர்தலை மனதிற்கொண்டே நடக்கும் கேலிக்கூத்து. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பதிலும், அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதிலும் மனிதநேயமோ, தார்மீக உணர்வோ இல்லை; முழுக்க முழுக்க அரசியல் இலாப நட்டக்கணக்குதான்!

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் கடந்த காலத்தில் துயர்துடைப்பு நிதி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கூடுதலாக அவர்களுக்கு உதவ விரும்பினால் அதனை தவெகவின் சார்பாகவோ, முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையிலோ செய்யட்டும். அதனைவிடுத்து, அரசு வேலை என்பதனை இடைத்தேர்தலுக்கான கேடயமாகப் பயன்படுத்துவது முறையானதல்ல. அரசு வேலைக்காக இரவு பகலாகப் படித்துவிட்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். தகுதித் தேர்வு எழுதிவிட்டு இன்றளவும் பணி ஆணை கிடைக்காமல் ஆசிரியர் பெருமக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் பணி செய்துவிட்டு முறையான ஓய்வூதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பல்லாயிரம் செவிலியர்கள், ஆசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், மின்துறை மற்றும் போக்குவரத்துப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தவெக அரசு, இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது மிகத் தவறானப் போக்காகும். ஆகவே, கரூர் இடைத்தேர்தலில் தன் அரசியல் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தவறான முடிவைக் கைவிட வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKKarurSeemanகரூர்சீமான்தவெகநாம் தமிழர் கட்சிவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிவாண்டியில் வெள்ளத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் ஸ்பைடர் மேன் உடையணிந்த இளைஞர் பிவாண்டியில் ஸ்பைடர் மேன்: வெள்ளத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்த இளைஞர்
Next Article தி.மு.க. எம்.பி. கனிமொழி தமிழ்நாட்டில் காவல்துறை இருக்கிறதா? – கனிமொழி எம்.பி. கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பணம் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஊழியர்

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு: காதலிக்கு ஐபோன் வாங்கி கொடுத்த ஊழியர் கைது!

அயோத்தி ராமர் கோவிலில் உண்டியலில் இருந்த பணத்தை திருடி, காதலிக்கு ஐபோன் வாங்கி…

ஜூலை 8, 2026

மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்: மேற்கு வங்க என்கவுண்டர் சம்பவம்

மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு…

ஜூலை 8, 2026

இந்தோனேசியாவின் பிரம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

இந்தோனேசியாவின் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலில்…

ஜூலை 8, 2026

மருத்துவர், ஊழியர் மீது கொடூர தாக்குதல்: சிவசேனா பிரமுகர் கைது

சென்னையில் பெண் மருத்துவர் மற்றும் ஊழியர் மீது…

ஜூலை 8, 2026

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பிய மதுரை தம்பதி: வைரலாகும் வீடியோ

கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி, லாரிக்கு அடியில்…

ஜூலை 8, 2026

You Might Also Like

சினிமா

விஜய் 69 பட விமர்சனம்: சீமான் கடும் தாக்கு

முதலமைச்சர் விஜய் நடிக்கும் 69வது திரைப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 'ஒரு படம் கூட உருப்படியாக இல்லை' என…

1 Min Read
சினிமா

விஜய் ஆட்சி: சினிமா பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமா? – பேரரசு நம்பிக்கை

இயக்குநர் பேரரசு, நடிகர் விஜய்யின் அரசு தமிழ் சினிமாவின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் என்றும், மாநில விருதுகளை சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

லிப்ட்டில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

சென்னை: சென்னையில் லிப்ட்டில் சென்ற இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

மெரினா நீலக்கொடி கடற்கரை: ஆணையாளர் ஆய்வு

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தார். மேலும், மெரினா நீச்சல் குளத்தையும் பார்வையிட்டு தூய்மைப் பணிகளை உறுதி…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?