MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!

தமிழ்நாடு

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!

Admin
Last updated: ஜூலை 8, 2026 3:00 மணி
Admin
Share
கொலை செய்யப்பட்ட பிரசாந்த் மற்றும் அவரது மனைவி சந்தியா, கள்ளக்காதலன் அனில் தொடர்பான செய்தி
மனைவி மற்றும் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட கணவன்
SHARE

கணவர் உயிரோடு இருந்தால் நாம் உல்லாசமாக இருக்க முடியாது என்ற கொடூர எண்ணத்துடன், மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் நிஜாமாபாத் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (35) என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி சந்தியா (30) தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். பிரசாந்த் வெளிநாட்டில் இருந்த சமயத்தில், சந்தியாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அனில் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர் வெளிநாட்டில் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சந்தியா, தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பிரசாந்த் திடீரென சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட பிரசாந்த், அவர் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். உடனடியாக மனைவியை கண்டித்து, கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் சந்தியா தனது கள்ளக்காதலனை சந்திப்பதை நிறுத்தவில்லை. தனது கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதாக சந்தியா நினைத்துள்ளார். இது குறித்து தனது கள்ளக்காதலன் அனிலிடம் கூறியுள்ளார்.

இருவரும் சேர்ந்து பிரசாந்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக அனில், அதே பகுதியை சேர்ந்த வெங்கட் சாய் என்பவரின் உதவியை நாடியுள்ளார். திட்டமிட்டபடி, கடந்த 29-ம் தேதி பிரசாந்த் வீட்டில் இருந்தபோது, வெங்கட் சாய் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பிரசாந்துக்கு அதிக அளவு மதுவை கொடுத்து அவரை மயக்க நிலைக்கு தள்ளியுள்ளார். சுயநினைவிழந்த பிரசாந்தை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

இதில் பிரசாந்த் படுகாயமடைந்தாலும், அவர் உயிரிழக்கவில்லை. சந்தியாவும், வெங்கட் சாயும் சேர்ந்து அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்ததும், 'உன் கணவர் உயிரோடு இருந்தால் நாம் உல்லாசமாக இருக்க முடியாது' என்று அனில், சந்தியாவிடம் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து சந்தியா, தனது கணவருக்கு மயக்க ஊசியையும், கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தையும் கலந்து கொடுத்துள்ளார். ஊசி போட்டதும் படுக்கையில் இருந்த பிரசாந்த் துடிதுடிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது சந்தியா, தனது கணவர் என்று கூட பாராமல் காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது கணவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக சந்தியா உறவினர்களிடம் அழுது நாடகமாடியுள்ளார். ஆனால் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரசாந்த்தின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் சந்தியாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 'வெளிநாட்டில் இருந்து வந்த என் கணவர் எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தார். அடிக்கடி தனிமையில் சந்திக்க முடியவில்லை. இதனால் அவர் எங்களுக்கு தொந்தரவாக இருந்து வந்தார். அதனால் எனது கள்ளக்காதலன் அனில் மற்றும் வெங்கட் சாய் ஆகியோருடன் சேர்ந்து என் கணவரை கொலை செய்தேன்' என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சந்தியா, அனில், வெங்கட் சாய் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Husband MurderNizamabad CrimeTamil NewsWife Affairஅனில்கள்ளக்காதல்கொலைசந்தியாநிஜாமாபாத்பிரசாந்த்மனைவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சவுரவ் கங்குலி பயோபிக் படத்தின் முதல் போஸ்டரில் ராஜ்குமார் ராவ் சவுரவ் கங்குலி பயோபிக்: ராஜ்குமார் ராவ் போஸ்டர் வைரல்!
Next Article நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பிரகாஷ் தாய் கிழவி பட இயக்குநருக்கு சிவகார்த்திகேயன் சொகுசு கார் பரிசு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பணம் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஊழியர்

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு: காதலிக்கு ஐபோன் வாங்கி கொடுத்த ஊழியர் கைது!

அயோத்தி ராமர் கோவிலில் உண்டியலில் இருந்த பணத்தை திருடி, காதலிக்கு ஐபோன் வாங்கி…

ஜூலை 8, 2026

மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்: மேற்கு வங்க என்கவுண்டர் சம்பவம்

மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு…

ஜூலை 8, 2026

இந்தோனேசியாவின் பிரம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

இந்தோனேசியாவின் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலில்…

ஜூலை 8, 2026

மருத்துவர், ஊழியர் மீது கொடூர தாக்குதல்: சிவசேனா பிரமுகர் கைது

சென்னையில் பெண் மருத்துவர் மற்றும் ஊழியர் மீது…

ஜூலை 8, 2026

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பிய மதுரை தம்பதி: வைரலாகும் வீடியோ

கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி, லாரிக்கு அடியில்…

ஜூலை 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருச்செந்தூர் கோவிலைச் சுற்றி 500 கடைகள் அகற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை சுற்றியிருந்த 500-க்கும் மேற்பட்ட கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. பக்தர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசுக்கு எடப்பாடி கண்டனம்

விவசாயிகளின் நலனை த.வெ.க. அரசு புறக்கணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டினார். அனுபவமற்ற முதல்-அமைச்சருக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த கடமைப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

1 Min Read
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி சாதனை
தமிழ்நாடு

தமிழக காற்றாலை மின் உற்பத்தி: ஒரே நாளில் புதிய சாதனை

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி வரலாற்றில் புதிய சாதனை. ஒரே நாளில் 12.43 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, இதுவரையிலான உச்சத்தை எட்டியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கேரள முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: ஸ்டாலின் கண்டனம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், எதிர்க்கட்சிகளை குறிவைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?