MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சட்ட மாணவி டிக்கெட் பரிசோதகரை கன்னத்தில் அறைந்த சம்பவம்: ரயில்வே போலீசார் விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்ட மாணவி டிக்கெட் பரிசோதகரை கன்னத்தில் அறைந்த சம்பவம்: ரயில்வே போலீசார் விசாரணை

தமிழ்நாடு

சட்ட மாணவி டிக்கெட் பரிசோதகரை கன்னத்தில் அறைந்த சம்பவம்: ரயில்வே போலீசார் விசாரணை

Admin
Last updated: ஜூலை 7, 2026 10:31 காலை
Admin
Share
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் மாணவி இடையே வாக்குவாதம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை மாணவி தாக்கிய சம்பவம்.
SHARE

சென்னையில், ரயில் நிலையத்தில் டிக்கெட் கேட்ட பெண் பரிசோதகரை சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி மாணவி வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த பெண் டிக்கெட் பரிசோதகர்கள், அந்த மாணவியிடம் டிக்கெட் கேட்டபோது, தான் ரயிலில் பயணிக்கவில்லை என்றும், உறவினரை வழியனுப்ப வந்ததாகவும் மாணவி கூறியுள்ளார். இருப்பினும், பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காதது குறித்து பரிசோதகர்கள் மாணவியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து, மாணவியை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று டிக்கெட் பரிசோதகர்கள் விசாரித்துள்ளனர். விசாரணையின் போது, மாணவியின் மொபைல் போனை பரிசோதகர் வாங்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மாணவி, தனது செல்போனை திரும்பக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென மாணவி பெண் டிக்கெட் பரிசோதகரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்த தாக்குதலால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, சம்பவத்தின் போது உடன் இருந்த மற்றொரு டிக்கெட் பரிசோதகரின் உதவியுடன், எழும்பூர் ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட சட்டக் கல்லூரி மாணவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ரயில்வே பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7Tamil Newsஎழும்பூர் ரயில் நிலையம்சட்ட மாணவிசென்னைடிக்கெட் பரிசோதகர்மாணவி தாக்குதல்ரயில்வே போலீஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article செந்தில்பாலாஜி தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தும் காவல்துறை அதிகாரிகள் செந்தில்பாலாஜி மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? – போலீசார் ஆலோசனை
Next Article மின்சாரத்துறை பணியிட மாற்றம் தொடர்பான ஆன்லைன் கலந்தாய்வு மின்சாரத்துறை பணியிட மாற்றம்: ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மேகதாது அணை: நடுவர் மன்றம் தேவையில்லை – அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது விவசாயிகளின் நிலைப்பாடு என்றும் அவர்…

1 Min Read
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,300க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,06,400க்கு விற்பனையாகிறது.

1 Min Read
சினிமா

நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார்: முதலமைச்சர் உதவியும் வீண்?

நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டும், அரசு உதவியும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

1 Min Read
தமிழ்நாடு

தென் கொரியாவில் தமிழ் வம்சாவளியினர்: அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு

தென் கொரியாவில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினரை சந்தித்த அமைச்சர் கீர்த்தனா, அவர்களின் திறமை, உழைப்பு மற்றும் மனவலிமையை பாராட்டி, அரசு எப்போதும் துணை நிற்கும் என உறுதியளித்தார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?