தற்போதைய கிரிக்கெட் உலகில் இந்திய அணிதான் மிகச்சிறந்த அணியாகத் திகழ்கிறது என்றும், அவர்களை வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து அணிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது என்றும் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான மைக் ஹெஸன், 2025-இல் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். இதுகுறித்து கிரிக்இன்போ இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "உண்மை என்னவென்றால், தற்போது இந்திய அணியை வீழ்த்த உலகிலுள்ள அனைத்து அணிகளுமே கடுமையாகப் போராடி வருகின்றன. பாகிஸ்தான் மட்டும் இதில் திணறவில்லை" என்று கூறினார்.
கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக ஹெஸன் குறிப்பிட்டார். இருப்பினும், பாகிஸ்தான் அணியின் தரம், இந்தியாவுக்கு எதிராக அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை வைத்தே தவறாக மதிப்பிடப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். அரசியல் காரணங்களால் இரு நாடுகளும் இருதரப்புத் தொடர்களில் விளையாடாத நிலையில், ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. இதில் 2022 முதல் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஹெஸன் மேலும் கூறுகையில், "2023 முதல் 2025 வரை பாகிஸ்தான் அணி ஐசிசி தொடர்களில் லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால், தற்போது எங்களது வெற்றி சதவீதம் 20 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக ஹாரி புரூக்கின் அதிரடி சதத்தால் மட்டுமே தோற்றோம். மற்றபடி இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் வென்றோம். இதனால் எங்களது அணி பலம் வாய்ந்ததாகவே உருவெடுத்துள்ளது" என்றார்.
2025 ஆசிய கோப்பையில் பெற்ற வெற்றிகளையும், 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்திய அணி நிர்வாகத்துக்கு புஜாரா, வைபவ்-க்காக சாம்சனை நீக்காதீங்க அதற்கு பதிலாக… என ஆலோசனை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.