மூக்கடைப்பால் அவதிப்படுகிறீர்களா? சுவாசிப்பதில் சிரமம் உள்ளதா? கவலை வேண்டாம், உடனடி நிவாரணம் தரும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. நீராவி பிடிப்பது சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும். அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு ஆவியை சுவாசிக்கவும். தேவைப்பட்டால், புதினா அல்லது பிற மூலிகைகளைச் சேர்த்து கொதிக்க வைத்தால், பலன் இரட்டிப்பாகும்.
தைல எண்ணெய் அல்லது புதினா எண்ணெயை நுகர்வதும் மூக்கடைப்பைப் போக்க உதவும். கொதிக்க வைத்த நீரில் சில துளிகள் தைல எண்ணெயைச் சேர்த்து, அந்த ஆவியை சுவாசித்தால் மூக்கடைப்பு உடனே சரியாகும்.
சலைன் நீரைப் பயன்படுத்துவதும் பலனளிக்கும். வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து, அந்த நீரை மூக்கினுள் சில துளிகள் விட்டால், சளி இளகி வடிந்து, சீரான சுவாசம் கிடைக்கும். தூசு மற்றும் பிற அடைப்புகள் நீங்கும்.
பூண்டுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. மூக்கடைப்பைப் போக்க பூண்டு ஒரு சிறந்த தீர்வாகும். பூண்டுப் பற்களை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது பூண்டு சூப் அருந்தலாம். பூண்டில் உள்ள கிருமி எதிர்ப்புத் தன்மை தொற்றுகளை நீக்கி மூக்கடைப்பை சரிசெய்யும்.