MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: உதயநிதிக்காக திமுக மக்களைக் கொன்றது – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > உதயநிதிக்காக திமுக மக்களைக் கொன்றது – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
தமிழ்நாடு

உதயநிதிக்காக திமுக மக்களைக் கொன்றது – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

Admin
Last updated: July 2, 2026 5:11 pm
Admin
Share
SHARE

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், திமுக அரசுதான் காவல்துறையை ஏவி மக்களைக் கொன்றது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 'கரூரில் காவல்துறையை வைத்து திட்டமிட்டு மக்களை கொன்றது திமுக அரசு. எங்கள் தலைவர் மீது கை வைத்ததற்கும், உங்கள் மகன் உதயநிதியின் அரசியல் வாழ்விற்காக எங்கள் மக்களைக் காவல்துறை மூலம் கொன்று குவித்ததற்கும் நிச்சயம் விரைவில் பதிலடி கொடுப்போம்' என்று ஆவேசமாகப் பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், 'கரூர் கண்ணீர் பாவத்திற்கு.. கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றார்.. நீங்கள் விட்ட கண்ணீர் கரூர் மக்களுடையது. நீங்கள் தான் உங்கள் குடும்பத்தில் கடைசி முதல்வர். கரூருக்கு அப்புறம் எங்களின் பரம எதிரி திமுக தான்' என்று கடுமையாக விமர்சித்தார்.

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாகவும், மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் கூடிய விரைவில் கூட்டணியை அறிவிக்கப் போகிறார்கள் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் போன்றோர் திமுகவோடு சேரக்கூடாது என்று கூறியபோதும், பழனிசாமி அதை கேட்கவில்லை என்றும், அதனால்தான் அவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தைரியமாக தவெகவில் இணைந்தார்கள் என்றும் அவர் கூறினார்.

அதிமுகவில் உள்ள 60% பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டதாகவும், இனி அதிமுக காகித அளவில் தான் இருக்கும் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். முதல் இரண்டரை வருடம் இபிஎஸ் முதலமைச்சராகவும், அடுத்து உதயநிதி முதலமைச்சராகவும் வருவார்கள் என்றும் அவர் கணித்தார். இபிஎஸ்-ன் துரோகம், சூழ்ச்சியால் இனி அதிமுகவில் இபிஎஸ்ஸும், அவரது மகனும் மட்டுமே இருப்பார்கள் என்றும், தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவின் சேலையை பேரவையில் வைத்து இழுத்தவர்களுடன் கூட்டணி வைக்க பேசி உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுக என்ற கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே இபிஎஸ் மறந்துவிட்டார் என்றும், அந்தந்தத் தொழில் செய்பவர்கள் நிம்மதியாகத் தொழில் செய்ய வேண்டும் என்றும், திமுகவால் இருந்த சூழல் இப்போது தவெகவால் இருக்கிறதா என்றும், இந்த மாற்றத்தை திமுகவால் கொடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆதவ் அர்ஜுனாஉதயநிதி ஸ்டாலின்கரூர்தமிழ்நாடு அரசியல்தவெகதிமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுகவில் இருந்து விலகிய விஜயபாஸ்கர்: ‘வலிகளையும் ரணங்களையும் சுமந்து வந்தோம்’
Next Article மேகதாது அணை: கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ரூ.1 செலுத்தி புதிய டாடா கார்: டாக்ஸி சந்தையில் புதிய புரட்சி!

டாக்ஸி சந்தையில் ஒரு புதிய புரட்சி! வெறும் 1 ரூபாய் செலுத்தி புதிய…

July 2, 2026

மணிப்பூர் வேதனை: பிரதமர் அனுதாபம் காட்டவில்லை – ராகுல் காந்தி

மணிப்பூர் மக்கள் தாங்க முடியாத துயரங்களை அனுபவித்து…

July 2, 2026

தமிழகம் தவிர்த்து வடமாநிலங்களில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில்,…

July 2, 2026

ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த…

July 2, 2026

இடைத்தேர்தல் நடத்தக்கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்…

July 2, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

விஜய் ஒரு புரட்சியாளர் – ஆளுநர் புகழாரம்

புதிய கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை அமைத்திருக்கும் விஜய்யை ஆளுநர் ஆர்.என்.ரவி வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார். 'புரட்சியை ஏற்படுத்தியவர் விஜய்' என்று சட்டமன்ற உரையில் குறிப்பிட்டார்.

1 Min Read
தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அன்புமணி கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

திருவாரூரில் 365 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் கைது

திருவாரூர் அருகே வாகன சோதனையின் போது, பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 365 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர்…

1 Min Read
தமிழ்நாடு

எம்.எல்.ஏ. பதவியேற்கவில்லை..! சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சி.வி. சண்முகம்

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?