MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Admin
Last updated: July 1, 2026 8:34 pm
Admin
Share
SHARE

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தை கடந்த 03.11.2024 அன்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்றும், அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்றும் குறிப்பிட்டு, இதனை கைவிட வலியுறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது என்றும், ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலூர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பி, பல ஆதாரப்பூர்வமான கேள்விகளை அரசை நோக்கி கேட்டு மக்களுக்காக நின்றவன் நான் என்றும், 'மக்கள் பிரச்சனைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம்' என்று சட்டப்பேரவையிலேயே முழங்கினேன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, மக்களுடன் நிற்பது மட்டும் தான் அதிமுகவின் ஒரே பணி என்றும், அது ஒருநாளும் மாறாது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். நச்சுத் திட்டம் என்று இன்றைய ஆளுங்கட்சி சொன்ன திட்டத்தை இப்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை இன்றைய முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றும், உள்ளபடியே அது நச்சுத் திட்டம் தான் என்றால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஎடப்பாடி பழனிசாமிசுரங்க திட்டம்தமிழ்நாடு அரசியல்தவெக அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியா-பாகிஸ்தான்: கைதிகள் பட்டியல் பரிமாற்றம்
Next Article அமைச்சர் சரத்குமார் வீடியோ விவகாரம்: நண்பருக்கு கொலை மிரட்டல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நொய்டாவில் தேனிலவில் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் மீது வழக்கு

சிக்கிமில் தேனிலவுக்கு சென்ற புதுமண பெண், மாடிப்படிக்கட்டில் இருந்து தள்ளி கொலை செய்ய…

July 1, 2026

இந்தியா-பாகிஸ்தான்: கைதிகள் பட்டியல் பரிமாற்றம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆண்டுதோறும் ஜனவரி…

July 1, 2026

மகனைக் கண்டுகொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கைது செய்தது போலீஸ்

சென்னையில், மகன் கண் முன்னே கணவரை மனைவியே…

July 1, 2026

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மின்வாரிய வெள்ளை அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு – அமைச்சர் நிர்மல்குமார்

நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், புதிதாக நியமிக்கப்பட்ட 300 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்குவார் என்றும் மின்சாரத்துறை அமைச்சர்…

1 Min Read
தமிழ்நாடு

ராமநாதபுரம் சிறுமி உயிரிழப்பு: குற்றவாளிகளுக்கு தண்டனை கோரி பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கவலை தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

திமுக ஆட்சியில் 32 துறைகளில் உதயநிதி, சபரீசனுக்கு சரிபாதி வசூல் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் 32 துறைகளில் உதயநிதி, சபரீசனுக்கு சரிபாதி வசூல் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பகிரங்க குற்றச்சாட்டு.

2 Min Read
தமிழ்நாடு

அணுக்கனிம சுரங்க கால அவகாசம் நீட்டிப்பு: தினகரன் கண்டனம்

அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?