காற்று மாசுபாட்டால் அதிகரிக்கும் ஆஸ்துமா மற்றும் வீசிங் பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்தியங்கள் மூலம் தீர்வு காணலாம். குறிப்பாக, கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்தி சுவாச பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம்.
மஞ்சள், அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளால் வீசிங் பாதிப்புக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அரைத்த மஞ்சள் தூளை கலந்து தினமும் காலையில் குடிப்பது வீசிங்கை குறைத்து, ஆஸ்துமா பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
மேலும், கடுகு எண்ணெய் மூக்கில் சளி சேர்வதை குறைத்து, சுவாச மண்டலத்தை சீராக செயல்பட வைப்பதன் மூலம் ஆஸ்துமா குணமாக உதவும். கடுகு எண்ணெயுடன் கற்பூரத்தை சேர்த்து பயன்படுத்துவது அல்லது சிறிதளவு கடுகு எண்ணெயை சூடாக்கி நுகர்வது ஆஸ்துமா நிவாரணத்திற்கு வழிவகுக்கும்.
இவை தவிர, தினமும் சர்க்கரை சேர்க்காமல் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகுவது சுவாசப் பாதையை சீராக்கி, சளி மற்றும் இருமலை குறைக்கும். ஆர்கானிக் தேனின் வாசனையை நுகர்வதும் வீசிங்கை கட்டுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.