தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி எண்களை இனி ஆன்லைன் மூலம் இடைத்தரகர்கள் இன்றி எளிதாகப் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் வெளிநாட்டு இறக்குமதி வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
திருத்தி அமைக்கப்பட்ட புதிய கட்டண விகிதங்களின்படி, பேன்சி எண்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.8 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சொகுசு எண்களுக்கு ரூ.8 லட்சம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த புதிய கட்டண முறையால் பயனாளிகள் நேரடியாக ஆன்லைன் மூலமாகவே தங்களுக்கு விருப்பமான பேன்சி எண்ணைப் பெற முடியும்.
புதிய கட்டண விகிதத்தின்படி, பயனாளிகள் நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, உரிய ஆவணங்களை இணைத்து பேன்சி எண்களைப் பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு தவிர்க்கப்பட்டு, வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.
இந்த அறிவிப்பின் மூலம், வாகனப் பதிவில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வாகன ஓட்டிகள் இனி ஆன்லைன் சேவையைப் பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான பேன்சி எண்களைப் பெறலாம்.