இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியில் 23 வயது வீரர் சூரியான்ஷ் செட்ஜேவை சேர்க்கக்கூடாது என முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐபிஎல் 2026ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய செட்ஜே, 7 போட்டிகளில் 158 ரன்கள் குவித்திருந்தாலும், பந்துவீச்சில் ஒரு ஓவர் கூட வீசவில்லை.
நிதிஷ் குமார் ரெட்டி காயமடைந்ததால், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் செட்ஜே சேர்க்கப்பட்டார். அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த், 'செட்ஜே போன்ற வீரர்களை மீண்டும் பழைய இடத்திற்கே அனுப்பிவிட வேண்டும்' என கூறியுள்ளார்.
'பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தாத ஒரு வீரரை எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுமதிப்பது ஏன்? அவரை பிளேயிங் லெவனில் சேர்த்திருக்கவே கூடாது. நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவரை எப்படி சேர்த்தார்கள் என்று எனக்கு புரியவில்லை. ஐபிஎல் தொடரில் அவர் எந்த அபாயகரமான ஆட்டத்தையும் ஆடியதாக எனக்கு தெரியவில்லை' என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், செட்ஜே இரண்டு ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். பேட்டிங்கில் ஐந்து பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அக்சர் பட்டேல் மற்றும் வருண் சக்கரவர்த்தியை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றும், ஆர்ஸ்தீப் சிங் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றும், ஹர்ஷித்ராணா ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டராகவும், பிரின்ஸ் யாதவ் நல்ல திறமையையும் காட்டியுள்ளதாகவும் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அக்சர் பட்டேல் மற்றும் கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.