MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மின்சார வாரிய தேர்வில் அநீதி – அண்ணாமலை கண்டனம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மின்சார வாரிய தேர்வில் அநீதி – அண்ணாமலை கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மின்சார வாரிய தேர்வில் அநீதி – அண்ணாமலை கண்டனம்!

தமிழ்நாடு

மின்சார வாரிய தேர்வில் அநீதி – அண்ணாமலை கண்டனம்!

Admin
Last updated: ஜூன் 29, 2026 2:34 மணி
Admin
Share
SHARE

கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் 2022 ஆம் ஆண்டு நிர்வாகக் காரணங்களைக் கூறி தேர்வு ரத்து செய்யப்பட்டதாக TANGEDCO அறிவித்தது. TN Act No. 14 of 2022, TNPSC (Additional Functions) சட்டத்தின்படி TNPSC மூலம் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், மின்பகிர்மானக் கழக உதவி மின்பொறியாளர் பணி நியமனம் தொடர்பாக 2025 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், கடந்த 26.07.2024 அன்று பொதுப்பணித்துறை (PWD) உதவி மின் பொறியாளர் காலிப் பணியிட நியமனங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ரத்து செய்யப்பட்ட TNPDCL உதவி மின்பொறியாளர் காலிப் பணியிடங்களில் 195 இடங்கள் பொதுப்பணித்துறை சார்பாக நடைபெற்ற தேர்வு முடிவுகள் மூலம் நிரப்பப்படும் என திடீரென அறிவிக்கப்பட்டது. இதற்கு வயது வரம்பும் 32 என நிர்ணயிக்கப்பட்டது. இது 2020 முதல் காத்திருந்த இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என 'வீ த லீடர்ஸ்' நிறுவனர் அண்ணாமலை தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் நிர்வாகக் குளறுபடியால் தகுதியான இளைஞர்களுக்கு வயது வரம்பில் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 13.09.2021 அன்று வெளியான அரசாணை எண் 91-ன் படி, கொரோனா பெருந்தொற்றால் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால் வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தப்படும். ஆனால், மின்பகிர்மானக் கழகத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது 04.07.2022 அன்றுதான். ஏற்கனவே 2020 முதல் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், வெறும் இரண்டு ஆண்டுகள் தளர்வு எப்படிப் பொருத்தமானதாக அமையும்? வயது வரம்பில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மின்பகிர்மான கழக உதவி மின்பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான TNPSC தேர்வு முடிவுகள் 23.01.2026 அன்று வெளியாகின. பணி நியமனங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் முன்பாக, வயது வரம்பைக் காரணம் காட்டி நல்ல மதிப்பெண்கள் பெற்ற இளைஞர்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசாணை எண் 231 மூலம் தமிழக அரசு சிறப்புத் தளர்வு வழங்கியுள்ளது. அதேபோல, 2013 ஆம் ஆண்டு இதே போன்று நீண்ட கால பணியிட நியமனங்கள் நடைபெறாத நிலையில், விதி 91(h) மூலம் ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வை தமிழக மின்சார வாரியம் வழங்கியிருந்தது. தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கும் இதேபோன்று வயது வரம்பில் தளர்வு கொடுத்திருக்க வேண்டும். நிர்வாகத் தவறுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நிவாரணம் மறுப்பது நியாயமல்ல. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, TNPDCL மற்றும் TNPSC நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒருமுறை சிறப்பு வயதுத் தளர்வு வழங்க வேண்டும். தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு கூடுதல் அறிவிப்பு என்ற பெயரில் பணியிடங்களையோ, விதிகளையோ மாற்றும் முறைகேடுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:TNPDCLTNPSCஅண்ணாமலைமின்சார வாரியம்வயது வரம்புவேலைவாய்ப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பென் ஸ்டோக்ஸ் ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் அவர் செய்த 3 மாஸ் சம்பவங்கள்!
Next Article புனே சிறுமி கொலை: 55 நாட்களில் தூக்கு தண்டனை – விரைந்த நீதி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாடாளுமன்றத்தில் 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்படும் காட்சி

நாடாளுமன்றத்தில் முதன்முறையாக ‘வந்தே மாதரம்’ பாடல் இசைப்பு

இந்திய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் வியாழக்கிழமை அன்று இசைக்கப்பட்டது.…

ஆகஸ்ட் 14, 2026

கார்கே பங்கேற்ற நிகழ்ச்சியில் ‘சுத்திகரிப்பு’ சடங்கு: விசாரணைக்கு பாஜக தலைவர் உத்தரவு

உத்தரகண்டில் கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் 'சுத்திகரிப்பு' சடங்கு…

ஆகஸ்ட் 14, 2026

விபத்து பகுதிக்கு செல்ல ஆம்புலன்சுக்கு 10 நிமிட கெடு

விபத்து நடந்த இடங்களுக்கு ஆம்புலன்ஸ்கள் 10 நிமிடங்களுக்குள்…

ஆகஸ்ட் 14, 2026

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை: தமிழகத்தை பாதிக்கும் – ராகுல் காந்தி கடும் விமர்சனம்

தமிழகத்தில் தொகுதி மறுவரையறை மாநிலத்தைப் பெரிதும் பாதிக்கும் என்றும், இதை ஆதரிப்பவர்கள் முட்டாள்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

1 Min Read
அண்ணாமலை 'வீ தி லீடர்ஸ்' இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

பாஜகவில் இருந்து விலகியது ஏன்? அண்ணாமலை முதல்முறையாக விளக்கம்!

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, 'வீ தி லீடர்ஸ்' இயக்கத்தின் மாநாட்டில், விலகியதற்கான காரணங்கள், மத நம்பிக்கை, தவெக அரசின் கடன் சுமை, Gen Z இளைஞர்களின்…

3 Min Read
உயிரிழந்த விசாரணை கைதி அருணாச்சலத்தின் பெற்றோர் செய்தியாளர்களிடம் பேசுகின்றனர்
தமிழ்நாடு

விசாரணை கைதி மரணம்: பெற்றோரின் கண்ணீர், விஜய்யை பதவி விலக கோரிக்கை

தூத்துக்குடியில் விசாரணை கைதி அருணாச்சலம் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோர் போலீஸ் தாக்குதலால் மரணம் என குற்றஞ்சாட்டினர். விஜய்யை ஆட்சியிலிருந்து விலக்க கோரிக்கை.

2 Min Read
தமிழ்நாடு

சினிமா கவர்ச்சி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஸ்டாலின்

சினிமா கவர்ச்சியால் அமைந்த தற்போதைய ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும், விரைவில் மக்கள் திமுகவை மீண்டும் ஏற்பார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?