MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தமிழ்நாடு

தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Admin
Last updated: மே 9, 2026 9:26 காலை
Admin
Share
SHARE

தூத்துக்குடி மினிசகாயபுரம் பகுதியைச் சேர்ந்த ஆர்க்(எ) மரியஅந்தோணி (வயது 35), ஒரு பிரபல ரவுடி ஆவார். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி என 29-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த இவர், திருச்செந்தூர் அருகே சோனகன்விளை காணியாளன்புதூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மரியஅந்தோணியை அந்த வீட்டில் வைத்து சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க மரியஅந்தோணி கத்தியால் தனது கழுத்தை வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபுவை நோக்கி, மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் மரியஅந்தோணி சுட்டார்.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் காயமடையவே, தற்காப்பிற்காக அவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மரியஅந்தோணியின் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த மரியஅந்தோணி பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, திருச்செந்தூர் தாலுகா போலீசார் மரியஅந்தோணி மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்திருத்தல் அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சூர்யகுமார், சுப்மன் கில் இருவரின் கேப்டன் பதவியையும் பறிக்க முடிவு.. புதிய கேப்டனாகிறார் ஸ்ரேயாஸ்
Next Article நிலவில் நேரடியாகத் தரையிறங்கும் முயற்சியை மாற்றியது நாசா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி அவசரநிலைப் போராளிகளுக்கான ஓய்வூதியம் குறித்து அறிவிக்கிறார்

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை எதிர்த்துப் போராடி சிறை சென்றவர்களுக்கு…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கர்நாடகாவில் குட்கா, பான் மசாலா தடை: முதல்-மந்திரி அறிவிப்பு

கர்நாடகாவில் குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார். இது பொது சுகாதாரத்தை மேம்படுத்தும்…

1 Min Read
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, எம்சாண்ட் கொண்டு செல்ல தடை விதிக்கும் உத்தரவு
தமிழ்நாடு

வெளிமாநிலங்களுக்கு ஜல்லி, எம்சாண்ட் கொண்டு செல்ல 3 மாத தடை

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் ஆலோசனைக்கு பிறகு இந்த நடவடிக்கை…

1 Min Read
தமிழ்நாடு சட்டப்பேரவை கட்டிடம்
தமிழ்நாடு

ஆளுநர் நாள் குறித்த அறிவிப்பில் தவறு: செய்தித்துறை அலட்சியம்

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிப்பில் தேதி தவறுதலாக குறிப்பிடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செய்தித்துறையின் அலட்சியம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

2 Min Read
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்
தமிழ்நாடு

பணிந்துவிட்டார்கள் – இது புதிய வரலாறு: திருமாவளவன்

காங்கிரஸ் மூலமாகத்தான் பா.ஜ.க.வுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றில்லை. CJP மூலமாகவும் வழங்க முடியும் என்பதை மக்கள் உறுதிப் படுத்தியுள்ளனர் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?