சென்னையில் உள்ள சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில், 24 ஜூன் 2026 அன்று பிரம்மாண்டமான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர பேராசிரியர் G. ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 800 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலில் தொடர் கற்றல், புதுமை, ஒழுக்கமான தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாட்டின் அவசியம் குறித்து அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
சென்னைஸ் அமிர்தா மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கூட்டு முயற்சியில் நடத்தப்படும் பி.எஸ்.சி. கேட்டரிங் அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், டிப்ளமோ இன் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், பி.எஸ்.சி. லேட்டரல் என்ட்ரி மற்றும் எம்.பி.ஏ. இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். இந்நிகழ்வில் சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. ஆர். பூமிநாதன் பேசுகையில், 'பட்டம் பெறுவது கல்வியின் முடிவல்ல, இது வாழ்நாள் முழுவதும் தொடரும் கற்றல், தலைமைத்துவம் மற்றும் தொழில்முறை சிறப்பிற்கான புதிய தொடக்கமாகும்' என்று குறிப்பிட்டார்.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, கொச்சி மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இயங்கிவரும் சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமம், ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஏவியேஷன் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட், நர்சிங் அண்ட் அலைட் ஹெல்த் சயின்சஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பை மையப்படுத்திய கல்வியை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை 31,651 தேசிய மற்றும் சர்வதேச வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ள இந்நிறுவனம், இந்தியா, ஐரோப்பா, மாலத்தீவு, மொரீஷியஸ், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் மாணவர்கள் பணியமர்த்தப்பட வழிவகுத்துள்ளது.
மலேசிய ஹோட்டல்கள் சங்கத்துடன் சமீபத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அச்சங்கத்தின் கீழ் உள்ள 1100 மலேசிய ஹோட்டல்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பு சென்னைஸ் அமிர்தா மாணவர்களுக்குக் கிடைக்கும். இந்நிகழ்வில் சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தின் தலைமை இயக்க அலுவலர் திருமதி பானுமதி, டீன் திரு. சுரேன், முதன்மை கல்வி ஆலோசகர் திரு. பால் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்துகொண்டனர்.