மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, “போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான முதல்-அமைச்சரின் காவல் பதக்கம்” 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை கீழ்கண்ட 15 காவல் அதிகாரிகளுக்கு வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்புப் பதக்கம், சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பணிக்காக வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்பு, காவல் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இது போன்ற பணிகளில் ஈடுபடும் மற்ற அதிகாரிகளுக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் இதோ: கடலூர் எஸ்பி- விவேகானந்தா சுக்லா, ராமநாதபுரம் எஸ்பி- சந்தீஷ், சென்னை கூடுதல் எஸ்பி- ஸ்ரீலட்சுமணன், சென்னை உதவி கமிஷனர்- மனோஜ் குமார், திருச்சி இன்ஸ்பெக்டர்- கண்ணன், கோவை இன்ஸ்பெக்டர்- காமராஜ், குரங்கணி எஸ்ஐ- அருண், குமுளி ஏட்டு- ராஜ்குமார், நாகை வேட்டைக்காரனிருப்பு ஏட்டு- கார்த்திகேயன், கோட்டைப்பட்டினம் ஏட்டு- குத்புதீன், நல்லூர் சிறப்பு எஸ்ஐ- ராமர், நெல்லை மதுவிலக்கு ஏட்டு- ஐயப்பன், சென்னை ஆர்.3, அசோக் நகர் ஏட்டு- பிரேம் குமார், கரூர் சிறப்பு எஸ்ஐ – செந்தில்குமார், மற்றும் தேனி ஏட்டு- ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த சிறப்புப் பதக்கத்தைப் பெறுகின்றனர்.
You Might Also Like
மேகதாது அணை திட்டம் தமிழ்நாட்டுக்கு எதிரானது அல்ல: கர்நாடக மந்திரி
மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் தமிழ்நாட்டுக்கு எதிரானது அல்ல என்றும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு தயார் என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை…
1 Min Read
சட்டசபையில் இதுவரை பதவியேற்காத 7 எம்எல்ஏக்கள்
தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும்…
1 Min Read
பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை: வனத்துறை அறிவிப்பு
தென்காசி: குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்குவதை முன்னிட்டு, பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் இனி கட்டணமின்றி குளிக்கலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள…
1 Min Read
திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்டனர்: ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் பள்ளிக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாக பெரும் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய தமிழக அரசு லஞ்சம் இல்லாமல் அனுமதி…
1 Min Read