15 போலீசாருக்கு முதல்வர் பதக்கம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, “போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான முதல்-அமைச்சரின் காவல் பதக்கம்” 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை கீழ்கண்ட 15 காவல் அதிகாரிகளுக்கு வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்புப் பதக்கம், சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான பணிக்காக வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்பு, காவல் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இது போன்ற பணிகளில் ஈடுபடும் மற்ற அதிகாரிகளுக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் இதோ: கடலூர் எஸ்பி- விவேகானந்தா சுக்லா, ராமநாதபுரம் எஸ்பி- சந்தீஷ், சென்னை கூடுதல் எஸ்பி- ஸ்ரீலட்சுமணன், சென்னை உதவி கமிஷனர்- மனோஜ் குமார், திருச்சி இன்ஸ்பெக்டர்- கண்ணன், கோவை இன்ஸ்பெக்டர்- காமராஜ், குரங்கணி எஸ்ஐ- அருண், குமுளி ஏட்டு- ராஜ்குமார், நாகை வேட்டைக்காரனிருப்பு ஏட்டு- கார்த்திகேயன், கோட்டைப்பட்டினம் ஏட்டு- குத்புதீன், நல்லூர் சிறப்பு எஸ்ஐ- ராமர், நெல்லை மதுவிலக்கு ஏட்டு- ஐயப்பன், சென்னை ஆர்.3, அசோக் நகர் ஏட்டு- பிரேம் குமார், கரூர் சிறப்பு எஸ்ஐ – செந்தில்குமார், மற்றும் தேனி ஏட்டு- ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த சிறப்புப் பதக்கத்தைப் பெறுகின்றனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version