தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி பானத்தை அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். பொதுவாக காய்கறி கடைகளில் கொசுறாக வழங்கப்படும் கொத்தமல்லியில், நம் உடலுக்குத் தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
இந்த பதிவில், கல்லீரலை சுத்தம் செய்யும் அற்புதமான கொத்தமல்லி பானத்தை எப்படி தயாரிப்பது என்பதைப் பார்ப்போம். இதற்குத் தேவையான பொருட்கள்: கொத்தமல்லித்தழை – 4 கைப்பிடி அளவு, பூண்டு – 4 பல், உப்பு – தேவைக்கேற்ப, எலுமிச்சை சாறு – 4 ஸ்பூன் மற்றும் தண்ணீர் – தேவைக்கேற்ப.
செய்முறை: முதலில் கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நறுக்கி, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அரைத்த கொத்தமல்லியுடன் பூண்டு, சிறிதளவு உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து எடுக்கவும். இந்த கலவையை நன்றாக வடித்து, அதில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து கொள்ள வேண்டும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்திய பிறகு, அரை மணி நேரம் கழித்து இந்த கொத்தமல்லி பானத்தை குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், கல்லீரலில் தேங்கியுள்ள தேவையற்ற நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும், இந்த பானத்தை தொடர்ந்து அருந்தி வந்தால் வாயுத்தொல்லை ஏற்படாது மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் குறையும்.