தமிழக முதல்வர் விஜய், வரும் ஞாயிற்றுக்கிழமையன்று போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை தொடங்கி வைக்கிறார். சென்னை பாலவாக்கம் ஆதி திராவிடர் அரசு பள்ளியில் காலை 9 மணிக்கு இந்த முகாம் தொடங்குகிறது.
நாடு தழுவிய அளவில், ஜூன் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் என முக்கிய இடங்களில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு முகாமின் மூலம், போலியோ நோயை முற்றிலுமாக ஒழிக்கும் அரசின் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.