திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடிய தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகளின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் அவர்கள் நடத்திய புகைப்படக் காட்சிகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேர் மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தவெக நிர்வாகிகள் அங்கு குவிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, பச்சிளம் குழந்தை ஒன்றுடன் சிகிச்சைக்காக வந்த ஆம்புலன்ஸ், மருத்துவமனைக்குள் நுழைய முடியாமல் பல மணிநேரம் காத்திருக்க நேர்ந்தது.
தவெகவினர், பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்வில் அதிக ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. பெற்றோர் கதறியபோதும், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் அவர்கள் அலட்சியப்படுத்தியதால், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இறுதியில், தவெகவினரின் கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பின்னரே ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம், மருத்துவ அவசரத் தேவைகளை விட அரசியல் கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக விமர்சனங்களை எழுப்பியுள்ளது. நோயாளிகளின் உயிரைக் காக்கும் அவசர ஊர்திகளுக்கு வழிவிடுவது அனைவரின் கடமை என்ற அடிப்படை விதியையும் மீறிய செயல் இது எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.