வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் 'மக்கள் சேவகன்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளில் இளைஞர்களை தலைவர்களாக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் திறமையான, வெளிப்படையான மக்கள் தலைமையை உருவாக்குவதே காங்கிரஸின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதற்காக, கள ஆய்வு மற்றும் களப்பணி ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ராஜேஷ்குமார் கூறுகையில், 'காங்கிரஸ் கட்சியில் இனி குரூபிஸம் மூலம் வேட்பாளர் தேர்வு செய்யப்பட மாட்டார்கள். களப்பணி மற்றும் கள ஆய்வில் சிறப்பாக செயல்படும் நபர்களுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். தலைவர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு சீட் வழங்கும் முறை இனி இல்லை' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டபோது, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய திட்டம் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனது நிலையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.