முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட அறிவிப்பின்படி, விளையாட்டு வீரர்களின் தினசரி உணவுப்படி ரூ.350-லிருந்து ரூ.450-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி, சிறப்பு விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறும் 2,600 மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆண்டு செலவினத் தொகை ரூ.29.12 கோடியிலிருந்து ரூ.37.44 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது, இது ரூ.8.32 கோடி கூடுதலாகும்.
மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான சீருடைக்கான தொகை ரூ.6,000-த்திலிருந்து ரூ.15,000-ஆகவும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான தொகை ரூ.10,000-த்திலிருந்து ரூ.25,000-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான தொகை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2,000-த்திலிருந்து ரூ.10,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவினத் தொகை ரூ.31.72 கோடியிலிருந்து ரூ.44.39 கோடியாக உயர்ந்துள்ளது.
மொத்தத்தில், உணவு, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2600 விடுதி விளையாட்டு வீரர்களுக்கு ரூ.12.67 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளன.