இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய ஏ அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை பவுலர்களை தனது அதிரடி ஆட்டத்தால் மிரள வைத்தார். வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டி டம்புள்ளா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்சி மற்றும் பிரியான்ஷ் ஆர்யா களமிறங்கினர். முதல் பந்தையே பவுண்டரி விளாசி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய வைபவ், அடுத்தடுத்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். வெறும் 11 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
வைபவ் தனது அதிரடி ஆட்டத்தில் மொத்தம் 8 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் விளாசி, 324.14 ஸ்ட்ரைக் ரேட்டில் 94 ரன்களை 9வது ஓவர் முடிவதற்குள்ளாகவே அடித்து ஆட்டமிழந்தார். அவரது மின்னல் வேக ஆட்டத்தின் காரணமாக, 20வது ஓவர் முடிவதற்கு முன்னதாகவே இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் 12 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கும் நிலையில், வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அந்த சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். அவரது இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது.