இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.எம்.யு.எல்) கட்சி, திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த திடீர் முடிவு குறித்து ஐ.எம்.யு.எல் தலைவர் காதர் மொகிதீன் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஐ.எம்.யு.ல் கட்சி 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் பயணித்து வந்துள்ளது.
தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரவில்லை என்றும், அனைத்து திசைகளிலும் விசில் ஊதப்பட்டு த.வெ.க வெற்றி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடும் என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுத்ததாக காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். எந்தவித நிபந்தனைகளும் இன்றி த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஐ.எம்.யு.ல் கட்சி அமைச்சரவையில் பங்கேற்கும்படி த.வெ.க. தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தாங்கள் கேட்காமலேயே இந்த அழைப்பு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இறுதியில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது என முடிவெடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, திமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் ஐ.எம்.யு.ல். வெற்றி பெற்றது. அக்கட்சியின் எம்.எல்.ஏ ஷாஜகான் த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.