நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மே மாதம் 3-ந் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், நாளை (ஜூன் 21-ந் தேதி) மறு தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த மறு தேர்வில் எந்தவித குளறுபடிகளும் ஏற்படாமல் இருக்க கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. வினாத்தாள்களை கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள நீட் மறு தேர்வு தொடர்பாக ஒரு பெரும் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த குளறுபடியால் மாணவரும் அவரது பெற்றோரும் செய்வதறியாது திகைத்துள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு விரைவில் புதிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த குளறுபடி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.