MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சொகுசு கப்பலை தாக்கிய கொடூர வைரஸ்: சிக்கித் தவிக்கும் 2 இந்தியர்கள்; 149 பேரின் நிலை என்ன ஆச்சு?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > சொகுசு கப்பலை தாக்கிய கொடூர வைரஸ்: சிக்கித் தவிக்கும் 2 இந்தியர்கள்; 149 பேரின் நிலை என்ன ஆச்சு?
இந்தியா

சொகுசு கப்பலை தாக்கிய கொடூர வைரஸ்: சிக்கித் தவிக்கும் 2 இந்தியர்கள்; 149 பேரின் நிலை என்ன ஆச்சு?

Admin
Last updated: May 8, 2026 11:24 am
Admin
Share
SHARE

சொகுசு கப்பலை தாக்கிய கொடூர வைரஸ்: சிக்கித் தவிக்கும் 2 இந்தியர்கள்; 149 பேரின் நிலை என்ன ஆச்சு?

எம்.வி ஹோண்டியஸ் கப்பலில் பயணித்து கொண்டிருக்கும் 149 பயணிகளில் சிலருக்கு மிக ஆபத்தான ‘ஹண்டாவைரஸ்’ தொற்று பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த உல்லாச கப்பலான  எம்.வி ஹோண்டியஸ் என்ற கப்பல், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலில் 23 நாடுகளைச் சேர்ந்த 149 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இந்தக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், அந்தக் கப்பலில் இருக்கும் பயணிகளில் சிலருக்கு உலகின் மிக ஆபத்தான ‘ஹண்டாவைரஸ்’ தொற்று பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பயணத்தின் இடையே, இதுவரை 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தக் கப்பலில் பணிபுரியும் 61 ஊழியர்களில், இரண்டு பேர் இந்தியர்கள் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.

அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அவர்களின் நிலை என்ன? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், நான்கு பயணிகள் சிகிச்சைக்காகக் கப்பலிலிருந்து மருத்துவ ரீதியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அர்ஜென்டினாவில் ஒரு பறவையின் கழிவுகளிலிருந்து கிளம்பிய தூசியை சுவாசித்ததே இந்தத் தொற்றுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் முதலில் காய்ச்சல், தசைவலி ஆகியவை ஏற்படும். பின்னர் 72 மணி நேரத்தில் நுரையீரலை பாதித்து உயிரை பறிக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த நோய்க்கு தடுப்பூசியோ, எந்தவித மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தக் கப்பல் ஸ்பெயினின் டெனெரிஃப் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அங்கு வரும் மே 11-ம் தேதி பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். உலக சுகாதார அமைப்பு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே 2008 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் சிலருக்கு ஹண்டாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கப்பலில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து இந்தியத் தூதரகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்… நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்
Next Article ஆளுநர் அழைப்பை ஏற்று மக்கள் மாளிகைக்கு சென்றார் விஜய்..!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

இந்தியா

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.  கொல்​கத்​தா​வின் பிரி​கேட் பரேடு மைதானத்​தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப்…

1 Min Read
இந்தியா

2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு மத்​தி​யில் பாஜக தலை​மையி​லான கூட்​டணி ஆட்​சிக்கு வந்த பிறகு செல்​வாக்கை அதி​கரித்து வரு​கிறது. அதை சமாளிக்க முடி​யாமல், தேர்​தலின் போது வேட்​பாளர்​களைத்…

2 Min Read

“நான் இப்போது முதல்வர்… அனைவருக்கும் பொதுவானவன்!” – சுவேந்து அதிகாரி

பதவியேற்பு விழா மேடையில் சுவேந்து அதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி கொல்கத்தா: “நான் இப்போது முதல்வராக இருக்கிறேன்; நான் அனைவருக்கும் பொதுவானவன்” என்று மேற்கு வங்கத்தின்…

2 Min Read
இந்தியா

காஷ்மீரில் ஜீலம் ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் பலி

வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ஹாஜின் பகுதியில், சந்திரகீர் கிராமத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் ஜீலம் ஆற்றின் கரை ஓரம் நின்று துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தனர்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?