தமிழக ஆளுநர் உரையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனதார பாராட்டியுள்ளார். 'சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, பண பலத்தை முறியடித்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர்' என ஆளுநர் கூறியது உண்மை என வைகோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2031-க்குள் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்ற 'வெற்றி தமிழகம்' என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற ஆளுநரின் அறிவிப்பை வைகோ பெரிதும் புகழ்ந்துள்ளார். இது ஜோசப் விஜய் அரசின் சிறந்த தொலைநோக்கு பார்வையை காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக நீதியை நிலைநாட்டவும், மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், நதிநீர் உரிமைகளைப் பாதுகாக்கவும் தவெக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று ஆளுநர் உரையில் அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டிருப்பதையும் வைகோ பாராட்டினார். தமிழ்நாட்டின் அடையாளமான இருமொழிக் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தொடர்ந்து நீடிக்கும் என்ற அரசின் அறிவிப்பையும் அவர் வரவேற்றுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் புதிய உத்திகளையும், ஆளுநர் உரையின் கொள்கைகளையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனதார பாராட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.