சட்டப்பேரவையில் முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ என யாரும் தனித்தனியாக இல்லை, அனைவரும் சமம்தான் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பல புதிய முகங்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கப்பட்டது.
மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எப்படி ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்வது, அவையின் மாண்பைக் காப்பது எப்படி என்பது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. இந்த பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சமமானவர்கள் என்பதை வலியுறுத்தினார்.
பயிற்சி பயனுள்ளதாக இருந்ததா, துறை சார்ந்த விளக்கங்கள் தெளிவாகப் புரிந்ததா என அமைச்சர்களிடம் முதலமைச்சர் விஜய் தனித்தனியாகக் கேட்டறிந்தார். இந்தப் பயிற்சி அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இது ஒரு சிறந்த தொடக்கமாக அமையும் என்றும், மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அவர்களின் பணிகள் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கி, ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.