தமிழக பாஜகவில் முக்கிய மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. நயினார் நாகேந்திரனை கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்க பா.ஜ.க. தேசிய தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர அர்லேகர், தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
புதிய மாநில பா.ஜ.க. தலைவர் தேர்வு குறித்தும் ஆலோசனை நடத்த, தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் விரைவில் தமிழகம் வர உள்ளார். அவரது வருகைக்குப் பிறகு, புதிய மாநில பா.ஜ.க. தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய தலைமையின் இந்த முடிவுகள், மாநில பா.ஜ.க.வின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நயினார் நாகேந்திரனின் கவர்னர் நியமனம் மற்றும் புதிய மாநில தலைவர் தேர்வு ஆகியவை தமிழக பா.ஜ.க.வில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.